districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியை குறைத்து  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? சிஐடியு கண்டனம்

திருப்பூர் பிப்.1- சிரமமான நிலையில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி ஜவுளி உற் பத்தியாளர்கள் கூலியை குறைப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையா கும் என்று திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது.  மேலும்,ஜவுளி உற்பத்தியாளர்கள்  நியாயமான கூலி வழங்க அரசு நிர்வாகம்  உரிய தலையீடு செய்ய வேண்டும் என்றும்  சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கைத் தறி நெசவாளர்கள் சங்கத்தின் செயலாளர் என்.கனகராஜ் செவ்வாயன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெச வாளர்கள் கைத்தறி நெசவு நெய்து வருகி றார்கள். தற்சமயம் தொழில்  நசிவு என்பதன் பெயரால் வாரம் இரண்டு சேலைகளுக்கு மட்டுமே ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரா பட்டுவை கொடுக்கிறார்கள். இதனால் வறு மையின் பிடியில் நெசவாளர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்க ளாக கைத்தறி நெசவாளர்கள் பெற்று வந்த  கூலியில் ஒரு சேலைக்கு நூறு  ரூபாய் கூலியை குறைத்து கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்குகிறார்கள். தற் சமயம் உயர்ந்து வரும் விலைவாசியில் இரண்டு சேலை மட்டுமே வாரம் கொடுக்கக் கூடிய நிலையில் மிகவும் சிரமத்தில் இருக்கக் கூடிய கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி  குறைத்துக் கொடுப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், காங்கே யம் வட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட கைத்தறி  துணை நூல் உதவி இயக்குனர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு கூலி குறைப்பு பிரச் சனையில் நடவடிக்கை மேற்கொண்டு கூலி குறைப்பு ரத்து செய்து, பழைய கூலி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் என்.கனகராஜ் கேட்டுக் கொண்டி ருக்கிறார்.

நாமக்கல்: 8 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாமக்கல், பிப்.1- நாமக்கல் மாவட்டத்தில் 8 வட்டாட்சியர் களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் 8 வட்டாட்சியர் களை இடமாற்றம் செய்து ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட் சியர் சுரேஷ், ராசிபுரம் வட்டாட்சியராகவும், ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருச்செங்கோடு உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், திருச்செங்கோடு உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கம்,  குமாரபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட வட் டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த சின்னதம்பி, நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப் பட்டு உள்ளனர். நாமக்கல் சமூக பாதுகாப்பு  திட்ட தனி வட்டாட்சியர் தமிழ்மணி இடமாறு தல் செய்யப்பட்டு, நாமக்கல் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாமக்கல் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் மாதேஸ்வரி, நாமக் கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சிய ராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பச்சைமுத்து இடமாறுதல் செய்யப்பட்டு, திருச்செங்கோடு வட்டாட்சிய ராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணி யாற்றி வந்த அப்பன்ராஜ் சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சிய ராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்  பொறுப்பை மணிகண்டன் கூடுதலாக கவனிப் பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை: இளம்பெண் தற்கொலை

உதகை, பிப்.1- பந்தலூரில், காணாமல் போன இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவர்களுக்கு 5 ஆவது வகுப்பு படிக்கும் ஒரு ஆண் குழந்தை யும், 4 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையே குடும்பத்தில் தீபாவுக்கும் அவரது கண வருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து தீபா குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு 3 மாதங்களுக்கு முன்பு கேத்திக்கு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து கேத்தியை அடுத்த கொல்லிமலையை சேர்ந்த செல்வகுமார் (32) என்பவ ருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வகுமாரிடம் தீபா கேட்டுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள அவர் மறுக்கிறார் என்ற கோபத்தில் தீபா, செல்வக்குமாரிடம் இருந்து கோபித் துக் கொண்டு  வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அதிர்ச்சியடைந்த செல்வகுமார் விஷம் குடித்துள்ளார். பின் னர் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாயமான தீபா  கேத்தி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மீட்கப் பட்டார்.  இதையடுத்து,அவர் கிணற்றில் குதித்து தற்கொலை  செய்து கொண்டது தெரியவந்ததை  தொடர்ந்து அவரது  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேங்காய் ஏலம்

நாமக்கல், பிப்.1- பரமத்திவேலூர் மின் னனு தேசிய வேளாண்மை  சந்தையில் ஒவ்வொரு வார மும் செவ்வாய்க்கிழமை தேங் காய் ஏலம் நடைபெற்று வரு கிறது. அதன்படி செவ்வா யன்று நடைபெற்ற ஏலத் திற்கு 4 ஆயிரத்து 260 கிலோ  தேங்காய்களை விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.27.50க்கும், குறைந் தபட்சமாக ரூ.18க்கும், சராச ரியாக ரூ.25க்கும் ஏலம்  போனது. மொத்தம் ரூ.96 ஆயி ரத்துக்கு தேங்காய் வர்த்த கம் நடைபெற்றது.

வனவிலங்குகளால் விவசாயம் பாதிப்பு: இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.1- தருமபுரி மாவட்டத்தில் வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. விவசாய பயிர் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தருமபுரி மாவட்டக்குழு வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பாப்பா ரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக யானைகள் விளைநிலங்களில் புகுந்து பெருமள வில் பயிர்களைச் சேதப்படுத்தி வரு கிறது. இதனால் விவசாயிகள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, யானைகளுக்கு மயக்க  ஊசிகள் செலுத்தி வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்கு களால் பயிர்கள் சேதமடைந்த விவ சாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண் டும். வனவிலங்குகளால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வனத்தைச் சுற்றிலும் முள் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும். சமீ பத்தில் பெய்த மழையினால் மாவட் டத்தில் பரவலாக நீர்ப்பிடிப்புப் பகு திகளில் உள்ள விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேத பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

யானை தாக்கி விவசாயி காயம்

பாலக்கோடு எரின அள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என் பவர் தனது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை அந்த வழியாக வந்த யானை தும்பிக்கையால் அடித்து தூக்கி வீசி உள்ளது. மாணிக்கம் அடிபட்டு சுய நினைவு அற்று மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, யானை  அங்கிருந்து சென்றுவிட்டது. காயங்களுடன் உயிர் பிழைத்த மாணிக் கத்தை சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அருகா மையில் உள்ளவர்கள் சேர்த்தனர். யானையால் தாக்கப்பட்டு பாதிப் படைந்த விவசாயி மாணிக்கத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டு மென அவர் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்படவில்லை

திருப்பூர், பிப்.1 - உடுமலைப்பேட்டையில் செயல்பட்டு வரும் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்றுவதற்கு எவ்வித முன்மொழிவும் அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின்  சார்பில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு உடுமலை மின்  பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஸ்வ நாதன் செவ்வாயன்று பதில் அளித்து இருக்கிறார். இந்த பதில் கடிதத்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இயங்கி வரும் உடுமலை மின் பகிர்மான வட்ட  மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு மாற்றம் செய்ய இதுவரை எவ்விதமான உத்தரவும் பெறப்படவோ அல்லது  அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்றம் செய்ய இவ்வலுவ லகத்தில் இருந்து எவ்வித முன்மொழிவும் அனுப்பப்படவோ இல்லை என்று தெரிவித்துள்ளனர். சமீபத்தில் உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற இருப்ப தாக தகவல் பரவியது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன்,  மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு  மாற்றக்கூடாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும், கடந்த வெள்ளி யன்று திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர் மதுசூதனன் கேள்வி எழுப்பினார். இதனிடையே மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் கடிதத் திற்கு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று மின்வாரியத்தினர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு

திருப்பூர், பிப்.1 - திருப்பூர் நகரில் பரபரப்பான பகுதியில் அமைந்திருக்கும்  மாநகராட்சி அலுவலகத்திற்குள் சுமார் இரண்டு அடி நீள முள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதனால், அங்கிருந்த அலு வலக ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி  மைய அலுவல கத்தின் நுழைவு வாயில் லிப்ட் பகுதியில் உள்ள அலுவலக  அறை ஒன்றில் சுமார் 2 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று  ஊர்ந்து சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அலறி அடித்து கூச்சலிட்டவாறு ஓடினர். இதை யடுத்து மாநகராட்சி ஊழியர்கள்,  பாம்பு பிடி வீரருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனடியாக, பாம்பு பிடிக்கக்கூடிய பாலாஜி என்பவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.  அவர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த அலுவலகத் திற்குள் தேடிப் பார்த்து அந்த பாம்பை பிடித்தார். பிடி பட்டது இரண்டடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு என்று அவர்  தெரிவித்தார்.

உடுமலை அணைகளின் நிலவரம்

 திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:49.88/60அடி  நீர்வரத்து:782கன அடி வெளியேற்றம்:1121கன அடி     அமராவதி அணை  நீர்மட்டம்:72.81/90அடி. நீர்வரத்து:67கனஅடி வெளியேற்றம்:908கன அடி

அறிவொளி சாலை சீரமைப்பு

திருப்பூர், பிப்.1 - திருப்பூர் மாநகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவொளி  சாலை செவ்வாயன்று சீரமைக்கப் பட்டது. திருப்பூர் மாநகரில் ஸ்ரீ சக்தி திரைய ரங்கம் அருகில் உள்ள வளம் பாலத்தில்  இருந்து காங்கேயம் சாலைக்கு சென்று  சேரும் செல்லாண்டியம்மன் துறை அறிவொளி சாலை போக்குவரத்து முக் கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக  நகரின் வடக்கு பகுதி அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, ஊத்துக்குளி சாலை ஆகிய பகுதிகளில் இருந்து கிழக்குப் பகுதிக்கு வருவதற்கு இந்த  சாலை பயன்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இதன் வழி யாகத்தான் செல்கின்றன. எனினும் இந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடி யாத அளவுக்கு மிக மோசமாக இருந்து  வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று அறி வொளி சாலையில் குண்டும், குழியு மாக சிதிலமடைந்த பகுதிகளில் சீர மைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், ஆங்காங்கே ஒட்டு வேலைகள் செய்வதற்கு மாறாக, இந்த  சாலையை முழுமையாகப் புதுப்பித்து  புதிய தார் சாலையாக மாற்றி அமைக்க  வேண்டும் என்று இப்பகுதிவாசிகள் கூறினர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியை குறைத்து  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

சிஐடியு கண்டனம்

திருப்பூர், பிப்.1 - சிரமமான நிலையில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி  ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைப்பது வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சும் நடவடிக்கையாகும் என்று  திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவா ளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. மேலும்,ஜவுளி உற்பத்தியாளர்கள்  நியாயமான கூலி வழங்க அரசு நிர் வாகம் உரிய தலையீடு செய்ய வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்தி  உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட  கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் செயலாளர் என்.கனகராஜ் செவ்வா யன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, திருப்பூர்  மாவட்டம், காங்கேயம் வட்டத் தில் 5,000-க்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி நெசவு நெய்து  வருகிறார்கள். தற்சமயம் தொழில்  நசிவு  என்பதன் பெயரால் வாரம் இரண்டு சேலைகளுக்கு மட்டுமே ஜவுளி உற் பத்தியாளர்கள் கோரா பட்டுவை கொடுக்கிறார்கள். இதனால் வறுமை யின் பிடியில் நெசவாளர்கள் தள்ளப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக கைத்தறி நெச வாளர்கள் பெற்று வந்த கூலியில் ஒரு  சேலைக்கு நூறு ரூபாய் கூலியை குறைத்து கைத்தறி ஜவுளி உற்பத்தியா ளர்கள் வழங்குகிறார்கள். தற்சமயம் உயர்ந்து வரும் விலைவாசியில் இரண்டு சேலை மட்டுமே வாரம் கொடுக் கக்கூடிய நிலையில் மிகவும் சிரமத்தில் யில் இருக்கக்கூடிய கைத்தறி  நெசவாளர்களுக்கு கூலி குறைத்துக்  கொடுப்பது என்பது வெந்த புண்ணில்  வேல் பாய்ச்சுவதாகும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், காங்கேயம் வட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட கைத்தறி துணை நூல் உதவி  இயக்குனர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு கூலி குறைப்பு பிரச்ச னையில் நடவடிக்கை மேற்கொண்டு கூலி குறைப்பு ரத்து செய்து, பழைய  கூலி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செய லாளர் என்.கனகராஜ் கேட்டுக் கொண்டி ருக்கிறார்.

பின்னலாடை நூல்  விலையில் மாற்றம் இல்லை

திருப்பூர், பிப்.1 - பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பருத்தி  நூலின் பிப்ரவரி மாதத்திற்கான விலை புதனன்று அறிவிக் கப்பட்டது. இதில் கடந்த மாதம் இருந்த விலையே தொடரும்,  எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பருத்தி நூல் விலையில் கிலோ வுக்கு ரூ.20 குறைக்கப்பட்டது. எனினும் தற்பொழுது நடப்பு  மாதத்திற்கான நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாதத்தில் இருந்த விலையே தொடரும் என நூற் பாலைகள் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பருத்தி  நூல் வகைகளின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவ தால், தொழில் துறையினர் வெளிநாட்டுக்கு அனுப்ப ஆர்டர்  பெற்ற ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையைக் குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பருத்தி நூல் கிலோ ஒன்றுக்கு 20 வீதம் விலை குறைக்கப்பட்டது.  இந்நிலையில் பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளதால் முதல்  நாளிலேயே, நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற் பாலைகள் புதன்கிழமை வெளியிட்டன. இதில் நூல் விலை யில் எந்த மாற்றமும் இல்லை, கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது. நூல் விலை  குறையவில்லை என்றாலும், அதிகரிக்காமல் இருந்தது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்று தொழில் துறையினர் கூறினர். தற்போதுள்ள விலை விபரம்: ஒரு கிலோ 20-ஆம் நம்பர்  கோம்டு நூல் ரூ.253-ஆகும், 24ஆம் நம்பர் ரூ.265-க்கும், 30ஆம்  நம்பர் ரூ.275-க்கும், 34ஆம் நம்பர் ரூ.295-க்கும், 40-ஆம் நம்பர்  ரூ.315-க்கும், 20-ஆம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ. 245-க்கும், 24-ஆம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ஆம் நம்பர் ரூ. 265-க்கும், 34-ஆம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ஆம் நம்பர்  ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

பிப்.4 ஆம் தேதி வாரச்சந்தை

நாமக்கல், பிப்.1- பரமத்திவேலூரில் பிப்.4 ஆம் தேதி வாரச்சந்தை நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் ஒவ்வொரு வார மும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக் கம். இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின் றன. இதேபோல், மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற் றுக்கிழமையில் நாட்டுக்கோழி சந்தையும் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் வாரச் சந்தையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று வியா பாரிகள் மற்றும் விவசாயிகள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பிப்.4 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) வாரச்சந்தையும், நாட்டுக் கோழி சந்தையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பேரை கடித்த தெரு நாய்

பள்ளிபாளையம், பிப்.1- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம் பாளையம் பேரூராட்சி, காவேரி ஆர்.எஸ், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில், தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால், சாலையில் செல்லவே பெண்கள் குழந்தைகள் முதியோர் அச்சப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதனன்று அதி காலை, காவேரி ஆர்.எஸ், கரட்டாங்காடு பகுதியில் 10க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று  கடித்து காயம் ஏற்படுத்தி யது. நாய் கடித்ததின் காரணமாக, அமுதா (62), வனிதா (31), கிரிஜா (7) சிறுமி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகா யமடைந்தனர். தெரு நாய்களால் காயமடைந்தவர்கள், முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சில மாதங்களாக தொடர்ந்து தெருநாய்கள் அதிக ரித்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தில் இது குறித்து பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே போர்க்கால அடிப்படையில், தெரு நாய் களை பிடித்துச் செல்ல வேண்டும். மேலும் அந்த நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போட வேண்டும். தெரு நாய்களின்  அதிகரிப்பால் பெண்கள், குழந்தைகள், முதியோர் சாலை யில் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளதாக வேதனை தெரி வித்தனர்.  இதுகுறித்து சம்பந்தபட்ட ஆலாம்பாளையம் பேரூராட்சி  வார்டு உறுப்பினரிடம், விசாரித்த போது, தகவல் கேள்விப் பட்ட உடனே, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து  ஆறுதல் கூறினோம். மேலும் இது குறித்து ப்ளூ கிராஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி கூட்டத்தில் பேசியுள்ளோம். இரண்டு  நாட்களில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும், என்றனர்.

ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

சேலம், பிப்.1- ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து  செய்ய வேண்டும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ கத்தில் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் விற்பனை நிலையம், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டி ருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டு இருக் கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்து  கொண்டு என்ன குற்றம் என்றே கூறாமல் பொதுவான குற்றம் எனக்கூறி காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். மேலும், ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இயங்கி கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. லாரி டிரைவர்கள் தலைகவசம் அணிய வில்லை. சீட்பெல்ட் போடவில்லை என முரணான காரணங்க ளுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது.  இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களால் வாகன உரி மையாளர் வாகனத்துக்கான காலாண்டுவரி, தகுதிச்சான்றி தழ், பர்மிட்கள் பெறுவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார் கள். எனவே, ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை  ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், அப ராதம் விதிக்கும்போது, ஓட்டுனரின் கையொப்பத்துடன் என்ன குற்றம்?. ஓட்டுநர் பெயர், உரிம எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கேட்டு மறியல் 

தருமபுரி, பிப்.1- ஒகேனக்கல், ஏரிக்காடு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநி யோகிக்கவில்லை. இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆவேச மடைந்த பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி சாலையில் மறியலில் ஈடு பட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்த வந்த பஞ் சாயத்து தலைவர் பாஸ்கரி டம் பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். ஆனால், பதிலளிக்காமல் நழுவினார். ஒகேனக்கல் காவல் ஆய்வா ளர் மகேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தியதில் மறியலை கைவிட்டு மக்கள் கலந்து சென்றனர்.