திருப்பூர், ஜூன் 26 - கள்ளச் சாராய போதை பொருள் கும்ப லுக்கு எதிராக போராடியதால் வெட்டி படு கொலை செய்யப்பட்ட கடலூர் தியாகிகள் தோழர் குமார், ஆனந்தனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில் அனுச ரிக்கப்பட்டது. வாலிபர் சங்க அலுவலகம் அருகில் திங்க ளன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகரத் தலைவர் கண்ணன் வாலிபர் சங்க கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள், போதை எதிர்ப்பு உறுதி மொழியை வாசித்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர்.கணேசன் நினைவு அஞ்சலி உரை நிகழ்த்தினார். அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த தியாகிகள் குமார், ஆனந்தன் உருவப்ப டத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 40க்கும் மேற்பட்ட கிளை உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாநகர குழு உறுப்பினர் சந்துரு நன்றி கூறி னார்.