நாமக்கல், ஏப்.20- கொளுத்தும் வெயிலை சமாளிப்பதற்காக பொதுமக்கள், கரும்புச்சாறு மற்றும் பழக்கடைகளில் குவிந்து வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அரசியல் கட்சியினர் கடும் வெயிலையும் பொருட் படுத்தாது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தனர். கட்சி தொண்டர்கள், மகளிரணியினர் வீதி, வீதியாக கொடி களை பிடித்தவாறு சென்று ஆதரவு திரட்டினர். மேலும் வரு வாய்த்துறையினர், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குதல், ஓட்டுச்சாவடிகளை தயார் நிலையில் வைத்திருத்தல், ஓட்டுப்பதிவு மெசின்கள் எடுத்து வந்து பாது காப்பாக வைத்திருத்தல், சம்பந்தபட்ட ஓட்டுச்சாவடி அலுவ லர்கள் வசம் மெசின்களை ஒப்படைத்தல், ஓட்டுச்சாவடி எல்லையில் கோடிட்டு வைத்தல் உள்ளிட்ட பல பணிகளை வெயிலின் தாக்கத்தால் சலிக்காமல் செய்தனர். கடும் கோடை வெப்பத்தில் அனைத்து தரப்பினரும் களைப்பு நீங் கிட இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, பழச்சாறு உள்ளிட்ட கடைகளில் திரண்டனர். இளநீர், பழங்கள் விலை அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் வந்துகொண்டுள்ளனர். வழக்கமாக இருந்த கரும்புச்சாறு கடைகளை விட தற்போது எண்ணிக் கையில் அதிகம் காணப்படுகிறது. இதுகுறித்து கரும்புச்சாறு கடை வியாபாரிகள் கூறுகை யில், இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு அதிகம் வரு கின்றனர். இதனால் கரும்புச்சாறு கடைகளில் கணிசமாக விற்பனை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள னர். அதேசமயம் இந்தாண்டு நுங்கு கடைகளை அதிகம் காண முடியவில்லை என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.