கோவை, மார்ச் 1- மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கிரீ டம், பரிசுகள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 2025-26 கல்வியாண்டு மழலை குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், மசக்காளிபாளை யம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை சனி யன்று துவங்கியது. மாணவர் சேர்க்கையின் முதல் நாளை முன்னிட்டு பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளுக்கு கிரீடம், பரிசு கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதல் நாளில் எல்.கே.ஜி வகுப்பிற்கு மூன்று பேரும், யு.கே.ஜி வகுப்பிற்கு மூன்று பேரும், முதலாம் வகுப்பிற்கு ஆறு பேர் என மொத்தம் 12 மாணவர்கள் பள்ளி யில் சேர்ந்துள்ளனர். மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவே பள்ளியில் சேரும் குழந்தை களுக்கு பரிசுகள் கொடுத்து வரவேற்கப்பட்டதாகவும், தற் போதைய சூழலில் தனியார் பள்ளிகளுக்கு செல்வதை விட அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்த னர்.