தாராபுரம், அக்.17- விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சட் டத்தை உருவாக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் வலியுறுத்தி உள் ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 6 ஆவது மாநாடு தாரா புரம் ஜோதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக, தாரா புரம் - தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து துவங் கிய பேரணி பெரிய கடைவீதி, பொள் ளாச்சி சாலை, அமராவதி ரவுண் டானா வழியாக மாநாட்டு அரங்கை அடைந்தது. சங்கத்தின் கொடியை மூத்த தலைவர் எஸ்.மல்லப்பன் ஏற்றி வைத்தார். இதன்பின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சண்முகம் தலைமை யில் மாநாடு துவங்கியது. மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சுந்தரம் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். மாநாடு வரவேற்புகுழு செயலாளர் என்.கனகராஜ் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சங் கத்தின் மாநிலச் செயலாளர் அ. பழனிச்சாமி உரையாற்றினார். வேலையறிக்கையை மாவட்ட செய லாளர் அ.பஞ்சலிங்கம், வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொரு ளாளர் ஆர்.மணியன் ஆகியோர் முன் வைத்தனர். சிஐடியு மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் ஆர்.குமார், ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர்.
இதில், விவசாயத் தொழிலாளர் களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். ஒருங்கிணைந்த பாது காப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண் டும். கிராமப்புற வேலைத்திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாவட் டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிர மிப்புகளில் இருந்து மீட்டு நிலமில் லாத ஏழை விவசாயத் தொழிலா ளர்களுக்கு விவசாயம் செய்யவும், வீட்டுமனைகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும். கொளத்துப் பாளையம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடி நீர் பிரச்சனையை தீர்க்க வேண் டும். மூலனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேசையம்பாளையம், கிளாங்குண் டல் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண் டும். நூறாண்டு பழமை வாய்ந்த தாரா புரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிக்கப்பட் டதை அமல்படுத்த வேண்டும். 108 சேவை முறையாக கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவராக ஏ. சண்முகம், செயலாளராக அ.பஞ்ச லிங்கம், பொருளாளராக ஆர்.மணி யன், துணைத்தலைவராக ஜி.சுந்த ரம், துணை செயலாளராக இ.சண் முகம் உட்பட 15 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில், மாநாட்டை நிறைவு செய்து விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சி. துரைசாமி உரையாற்றினார். வர வேற்புக்குழு தலைவர் ஆர்.வெங்கட் ராமன் நன்றி தெரிவித்தார். முன்ன தாக, தாராபுரம் ஓட்டல் தொழிலாளர் கள் சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.