நாமக்கல், மார்ச் 9- தபால் நிலையத்தில் ஆதார் திருத்த சேவையை முறையாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள எலச்சிபாளை யம் ஒன்றிய அலுவலகம் எதிரில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அனைத்து தபால் நிலை யங்களிலும் ஆதார் திருத்தப்பணி கள் செய்து தர வேண்டும் என ஒன் றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எலச்சிபாளையம் தபால் நிலையத் தில் ஆதார் திருத்த பணிகளுக்கு வாரத்தில் ஒருமுறை மட்டும், அது வும் சில மணி நேரங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்கின்றனர். இதனால் தபால் நிலையத்துக்கு வரும் பொது மக்கள் போதிய நேரம் கிடைக்கா ததால் மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர். சில நேரங்களில் சர்வர் பிரச்சனை ஏற்படும் போது, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தினால் ஆதார் பணிகள் மேற்கொள்ள முடியாததால், எலச்சி பாளையம் சுற்றுவட்டார பகுதி மக் கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில், வெள்ளியன்று அலுவலகத்துக்கு வந்த 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அதன் பின் அலுவலகத்திற்கு வந்த அதி காரிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட் டும் டோக்கன் வழங்கிவிட்டு, காத்தி ருந்தவர்களுக்கு டோக்கன் வழங் காததால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும், ஏதாவது ஒரு காரணங் களால் ஆதார் திருத்தப்பணிகள் மேற்கொள்ள முடியாமல் திரும்பி செல்கிறோம் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். எனவே, ஆதார் சேவையை முறையாக வழங்க வேண்டும். தினசரி வருகை தரும் பொதுமக்களுக்கு ஆதார் திருத்த பணிகளை செய்து தர வேண் டும். பொதுமக்களை அலைக் கழிப்பு செய்யக்கூடாது என வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் தபால் துறை அலுவ லகம் முன்பு தட்டி ஒன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களின் கவனத்தையும், பாராட் டையும் பெற்றுள்ளது. அதேநேரத் தில், அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.