districts

இறக்குமதி வரியை ரத்து செய்தும் பயனில்லை! பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை

திருப்பூர், ஏப்.30- பஞ்சு இறக்குமதி வரி  11 சதவிகிதத்தை செப் டம்பர் வரை நிறுத்தி வைத் தும் கூட நூல் விலை குறையவில்லை. எனவே, பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) கூறியுள்ளது. இதுதொடர்பாக சைமா தலைவர் வைக்கிங் ஏ.சி. ஈஸ் வரன் சனியன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது, ஒன்றிய அரசு இறக்குமதி வரியை செப்டம்பர் வரை நிறுத்தி வைத்தாலும் கூட நூல் விலை குறைய வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. ஜவுளித்தொழிலில் பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வரி குறைப்பு செய்தாலும் வெளிநாட்டிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கு உரிய கன்டெய்னர்கள் இல்லாத தால் பஞ்சு இங்கு வந்து சேர மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். அத்துடன் இங்கு மிகப் பெருமளவு பஞ்சை வைத்திருக்கும் எம் என் சி பெருமுதலாளிகள் 50 முதல் 70 சதவிகிதம் வரை லாபம் வைத்து விற்பனை செய் கின்றனர். இதனால் இறக்குமதி வரி நிறுத்தப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை. எனவே பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தி யாளர் சங்கம் சார்பில் வைக்கிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டு உள்ளார்.