districts

img

சிபிஎம் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளராக பா.சௌந்தரராசன் தேர்வு

திருப்பூர், அக்.14 – மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் வடக்கு மாநகரச் செயலாள ராக பா.சௌந்தரராசன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் வடக்கு மாநகர  24 ஆவது மாநாடு ஞாயிறன்று,  ரங்கநாதபுரம் கொடிக்கம் பம் பகுதியில் தோழர் சீத்தாராம்  யெச்சூரி நினைவரங்கில் (மளிகை முத்து  தோட்டம்) நடைபெற்றது. வரவேற்புக்குழு துணைத்தலைவர் விழிப்பு எம்.நடரா ஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார். பொது  மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் வி. ஈஸ்வரமூர்த்தி  வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சுப்பிரமணியன் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். வடக்கு மாந கரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் அறிக் கையை முன் வைத்தார். இம்மாநாட்டில், திருப்பூர் மாநகரில்  கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வரப்படாமல் இருக்கும் நகர்  நல மையங்களை உடனடியாக செயல்ப டுத்த வேண்டும். மாநகரில் மழைநீர் வடி கால் அமைக்கவும், கழிவுநீர்  பாதையை தூர்வார வேண்டும். ஊத்துக்குளி சாலை மற்றும்  கொங்கு நகர் பகுதிகளை இணைக்கும் முதல், இரண்டா வது ரயில்வே கேட் பகுதிகளில்  சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும். ரேசன் கடைகளில் மக்களுக்கு அனைத்து நாட்க ளிலும் எல்லாப் பொருட்க ளும் தரமான முறையில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள வரிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் வடக்கு  மாநகரச் செயலாளராக பா.சௌந்தரராசன் மற்றும் 15 மாநகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே உண்ணிக்கிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து பேசி னார். நிறைவாக பி.மனோகரன் நன்றி  கூறினார். இம்மாநாட்டில், முருங்கப்பாளை யம் கிளை சார்பில் தீக்கதிர் வளர்ச்சி நிதி யாக ரூ.5000 வழங்கப்பட்டது. இதில் மூத்த  தோழர்கள், மாவட்டக்குழு உறுப்பினர் வை. ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.