districts

img

எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் நாடு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது

சேலம், அக்.17- கடும் விலைவாசி உயர்வு, வேலை யிண்மை, பொருளாதாரம் கடும் வீழ்ச்சி என மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி நாடு அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாக மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். சேலத்தில் சிபிஎம் சார்பில்  பாசிச பாஜக அரசை கண்டித்து அரசியல் பிரச்சார பொதுக் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்றது. இதில் கட்சியின் தமிழ் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரை யாற்றினார். அவர் பேசுகையில், உலக பட் டினி குறித்த ஆய்வறிக்கை வெளிவந்துள் ளது. அதில் 116 நாடுகளில் கணக்கெடுத்த அடிப்படையில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளது. நமக்கு அண்டை நாடாக உள் ளாக பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான்  நமக்குப் பின்பு தான் உள்ளது. உலக வங்கி ஆய்வறிக்கையில் அதிகமான பணவீக்கம் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளது. ஏற்கனவே ஆறு சதவீதமான பண வீக்கம் இருந்தது தற்போது 10 சதவிகித மாக பண வீக்கம்  உள்ளது. உணவுப் பொருட் களின் பணவீக்கம் மிகவும் அதிகமாக உள் ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எட்டு ஆண்டு கால மோடி அரசாங்கத் தின் ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு சென்றுள் ளது. விலைவாசி உயர்வு, பண வீக்கம், வர லாறு காணாத வேலை இல்லாத திண்டாட் டம் இவைகளை தீர்க்க வக்கில்லாத அர சாங்கமாக மோடி அரசு உள்ளது. ஆனால், இதனை திசை திருப்ப நாட்டில் மத, மொழி பிரச்சனையை தூண்டிவிட்டு தேவையற்ற கலவர சூழ்நிலையை உருவாக்கிக் கொண் டுள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து தற் போது மத்தியில் இந்தி தான் ஆட்சி மொழி யாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற அலுவல் குழு சிபாரிசு செய்ய வேண்டிய அவ சியம் என்ன வந்தது. அரசியல் அமைப்பில் அறிவித்த அனைத்து மொழிகளையும் அறி விக்காமல் இந்தியை மட்டும் அறிவிப்பது எதற்காக. மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐசி மத்திய பல்கலைக்கழகங்கள் மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இனி பயிற்று மொழியாக இந்தி மட்டுமே இருக்கும். ஆங்கிலம் கூட தவிர்க்க முடி யாத  இடத்தில் தான் இருக்கும் அதுவும் படிப்படியாக நீக்கப்படும் நிலை ஏற்படும். இந்தியாவில் பழமொழிகள் உள்ளது. இந் திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் மற்ற மாநில மொழிகளின் நிலை என்ன வாகும். 

இப்படி மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும், விற்பனை செய்கிற  வேலையை பாஜக அரசு மேற்கொண்டி ருக்கிறது. நல்லவேளை சேலத்தில் புகழ் வாய்ந்த சேலம் உருக்காலை தனியார்  மையம் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. அது எப்போதும் ஏலத்திற்கு வரும் நிலை உள்ளது. மோடி அரசு அதை விற்றாக  வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளது.  அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை யும் தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையே மோடி அரசாங்கம் எடுத்து வருகிறது. ஊடகத் துறையினரை பாஜக மதிப்பது இல்லை. அவர் கள் கூறும் விஷயத்தை மட்டுமே மக்களுக்கு கூறவேண்டும் என பாஜக நினைக்கிறது. உல கம் முழுவதிலும் உள்ள நாடுகளில் பத்திரி கையாளர்கள் அதிகம் தாக்கப்படும் நாடு களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சில  பத்திரிகையாளர்கள் உண்மையை வெளி யிடும்போது அவர்களை கைது செய்வது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.  

தமிழக நிலை குறித்து கே.பாலகிருஷ் ணன் பேசுகையில், சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுத்துள்ள தாக தகவல் வருகிறது. தற்போதைய திமுக அரசை கேட்டுக் கொள்வது என்னவென்றால் குடிநீர் விநியோகத்தை கூட தனியாருக்கு கொடுத்தால், மாநகராட்சி, நகராட்சி உள் ளாட்சி  அமைப்புகள் எதற்கு உள்ளது. தண் ணீரை கூட விநியோகம் செய்ய முடிய வில்லை என்றால் நிர்வாகம் என்ன வேலை  செய்யப் போகிறது. அதிமுக கட்சி பாஜக விற்கு பல்லக்கு தூக்கம் செயலையே செய்து வருகிறது. ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே மாறி மாறி பல்லாக்கு தூக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார்கள். தமிழகத் தின் நலனில் எந்த அக்கறையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது. இந்தி திணிப்பு விஷயத்தில் பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத கட்சியாக அதிமுக இருக்கிறது, என்றார்.  முன்னதாக, இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தை மெருகேற்றும் வகையில், சேலம் அக்னி கலை குழு மற்றும் மாங்குயில் இசை  குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.