திருப்பூர், ஜூலை 31 - தமிழக முதல்வர் அறிமுகப்ப டுத்தி இருக்கும் ஆன்லைன் கட் டட அனுமதி திட்டம் வரவேற்கத் தக்கது. அதேசமயம் கட்டிட அனு மதி பெறுவதற்கான கட்டணத்தை அதிகரித்திருப்பது மக்களுக்கு சுமையாக இருக்கும் என்பதால், புதிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள் ளது. திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதன்கிழமை ஆன் லைன் முறையில் கட்டட அனு மதி பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் தீர்மானத்தை மேயர் தினேஷ் குமார் முன்மொழிந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆர்.மணிமேகலை எழுந்து ஆன்லைன் முறை கட்டட அனுமதி திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிப்பதாகவும், அதேசம யம் அனுமதி பெறுவதற்கான கட் டணம் கடுமையாக உயர்த்தப் பட்டு இருப்பது சரியல்ல என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறுகை யில், தமிழக முதல்வரால் அறிமு கப்படுத்தப்பட்டுள்ள 2500 சதுர அடி மனை இடத்தில் 3500 சதுர அடி வரையிலான கட்டடங்க ளுக்கு உடனடி கட்டடம் கட்ட அனுமதி தரும் திட்டம் மிகவும் வரவேற்க தக்க திட்டம். இதனால் பொதுமக்கள் கட்டிடம் கட்ட அனு மதி கோரி விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்கும் நிலைமை தற்போது இருக்காது. பொதுமக் கள் அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலையும் இருக்காது. ஆகவே இது பொது மக்களுக்கு நல்ல பலனை தரக்கூடிய திட்டம். ஆனால் இந்தத் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. பழைய திட்டப்படி 1500 சதுர அடி குடியிருப்பு கட்டடத்திற்கு ரூ.40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந் தது. தற்போது ஒரு சதுர அடிக்கு 88 ரூபாய் என்று நிர்ணிக்கப்பட் டுள்ளது. அதன்படி பார்த்தால் 1500 சதுர அடி குடியிருப்பு கட்ட டத்திற்கு ரூ.1,32,000 கட்ட வேண் டிய நிலை உள்ளது. இந்த பல மடங்கு கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக் கப்படுவார்கள். எனவே பொது மக்கள் பாதிக்காதவாறு இந்த உடனடி கட்டிட அனுமதி தரும் திட்டத்திற்கான கட்டணத்தை குறைத்து, ஏற்கனவே கட்டட அனுமதிக்கு வாங்கிக் கொண்டி ருக்கும் அதே கட்டணத்தில் செயல்படுத்த வேண்டும். அப்போ துதான் இந்தத் திட்டத்தின் பயன் முழுமையாக மக்களுக்குச் சென் றடையும் என்று தெரிவித்து, மேயர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை கடிதம் வழங்கினார். அதேபோல் அதிமுகவினரும் ஆன்லைன் கட்டட அனுமதியை வரவேற்பதாகவும், அதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.