ஈரோடு, மார்ச் 22- நசியனூர் அருகே பிற்படுத்தப் பட்ட சமூக குடும்பத்தினரின் வீடு களை இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் காத்திருப்புப் பேராட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு மாவட்டம், நசியனூர் பேரூராட்சி, பாண்டியம்பாளையத் தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமு தாயத்தைச் சேர்ந்த 21 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் வீடுகளை தனியார் தலை யீட்டின், நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித் தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும் நசியனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு எம்.நாச்சி முத்து தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிச்சாமி, சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா, தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.