districts

img

தூங்கி வழியும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து வேலம்பாளையம் சாலையில் சிபிஎம் மறியல்

திருப்பூர், செப். 2 - வேலம்பாளையம் சாலையை உடனே செப்பனிட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி, 12 ஆவது வார் டுக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் - வேலம் பாளையம் - சோளிபாளையம் வரையிலான சாலையை, பாதாளச் சாக்கடைப் பணிகள், நான்காவது குடிநீர்த் திட்டப் பணிகள், அதானி கேஸ் பைப் லைன் பணிகள் என ஆண்டுக் கணக்கில் தோண்டி சிதைத்துக் கொண்டே உள்ளனர். இச்சாலையை, அரசு மற்றும் தனியார்  பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவி யர், அவர்களது பெற்றோர், பனியன் கம்பெ னிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், சிறு  கடை வணிகர்கள், அரசு ஊழியர்கள் என ஆயி ரக்கணக்கானவர்கள் தினந்தோறும் பயன்ப டுத்துகின்றனர். அவர்களில் பலர் குண்டும்  குழியுமான இச்சாலைகளில் வாகனங்களில்  இருந்து விழுந்தும் கை, கால்கள் முறிந்து  மாதக்கணக்கில் வேலைக்குச் செல்ல முடி யாமலும், மருத்துவமனை கட்டணத்தால் கடன்பட்டும் சொல்ல முடியாத வேதனை யில் தவிக்கின்றனர். 3 மாதத்துக்கு முன்பு  சாலையில் தடுமாறி கீழே விழுந்த இளைஞர்  ஒருவர் உயிரிழந்த கொடுமையும் அரங்கேறி யுள்ளது. மேலும் இந்தச் சாலையில் தினமும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல் வோர், வாகனப் பராமரிப்புக்கும் கூடுதலாகச்  செலவிட வேண்டிய நிலைக்கும் ஆளாகின்ற னர்.மண் சாலையாக மாறிப்போய், அதில்  எழும்பும் புழுதியினால் நடத்து செல்வோர், சாலையோர கடைகளில் வேலை செய்வோர்  என ஏராளமானோருக்கு சுவாசக் கோளாறு களும், நுரையீரல் தொடர்பான நோய்களும் பாதித்துள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை மாதம் முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்து, கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி,  அனுப்பர்பாளையம் முதல் சோளிபாளை யம் வரை தண்டோரா போட்டு நடைபயணப்  போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட் டது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 18 அன்று  சாலைப் பராமரிப்புப் பணிகள் தொடங்கு வதற்கு பூமி பூஜை நடத்தினர்.ஆனாலும்,  இந்தச் சாலை மக்கள் பயன்படுத்துவதற்கு  இயலாத நிலையிலேயே தொடர்கிறது. மாநக ராட்சிப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இச் சாலையை சீரமைக்காமல் மாநில நெடுஞ்சா லைத் துறை காலம் தாழ்த்தி வருகிறது.  இதனைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி  அளவில் வேலம்பாளையம் - சிறு பூலுவபட்டி  சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், வேலம்பாளையம் நகரச் செயலா ளர் ச.நந்தகோபால் தலைமையில் சாலைமறி யல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே. ரங்கராஜ்,  ஜி.சாவித்திரி, மூத்த தோழர் வி. பி. சுப்பிரம ணியம், நகரக் குழு உறுப்பினர்கள் த. நாக ராஜன், பி. சின்னச்சாமி, ஆர். சுகுமார், அ.  உமாநாத், பி. நவபாலன், பி. பாபு, வி. லட்சுமி  உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இதையடுத்து காவல்துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ  இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைப் பணியைத் தொடங்காமல் கலைவ தில்லை என சொன்னதைத் தொடர்ந்து, பொக் லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு உட னடியாக சாலை செப்பனிடும் பணி தொடங் கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நிறைவு பெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, அப்பகுதி மக்களும், வணி கர்களும் ஆதரவு தெரிவித்தனர்.