districts

img

சொத்து வரி உயர்வை திரும்ப பெறக் கோரி சிபிஎம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம்

அவிநாசி,நவ.11 திருமுருகன்பூண்டி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக் கோரி மனுக்   கொடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது மக்களை பாதிக்கும் ஆண் டுக்கு 6 சதவீதம் வரி உயர்வை ரத்து  செய்யக் கோரியும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாமல் ஒவ் வொரு வரி விதிப்பிற்கும் குப்பை வரி  விதிக்க கூடாது எனக் கோரியும், அரை யாண்டு முடிந்து அக்டோபர் மாதம்  வரி செலுத்தும் போது காலதாமத கட்ட ணம் ஒரு சதம் வட்டி போடுவதும், ஆண் டுக்கு ஒரு முறை மார்ச் மாதம் வரி செலுத் தும் போது கால தாமதக் கட்டணம் போடு வதை ரத்து செய்யக் கோரியும், ஆண்டுக்கு ஒரு முறை பொதுமக்கள் வீட்டு வரி செலுத்தும் போது காலதா மதக் கட்டணம் வட்டி 1 சதம், வரி உயர்வு,  ஆண்டுக்கு 12 சதம் உயர்த்தியதை  ரத்து  செய்யக் கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திருமுருகன் பூண்டி நக ராட்சி கிளைகள் சார்பில்  முன்னாள் ஒன் றியக்குழு உறுப்பினர் காமராஜ் தலை மையில் நகர்மன்ற அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத னைத் தொடர்ந்து பொதுமக்களுடன் நக ரமன்ற அலுவலகத்தில், நகராட்சி அதி காரிகளிடம் 175 மனுக்கள் அளித்தனர். இந்த ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகிருஷ்ணன், ஒன்றியச் செய லாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழ னிச்சாமி, பாலசுப்பிரமணியம், சண் முகம், நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிர மணியம், தேவராஜன், கிளைச்செய லாளர் ராஜ், ஈஸ்வரன், ராஜேந்திரபூ பதி, ராஜன் ஆகியோர் பேசினர். இறுதி யாக ஆர்ப்பாட்டத்தை அருணாசலம் நன்றி கூறி நிறைவு செய்தார்.