districts

img

காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஎம் மனு

சேலம், ஏப்.2- விவசாய சங்க தலை வர்கள் தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவல கத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஆத் தூரில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரு மான பெ.சண்முகம் உள்ளிட்ட விவசாய சங்க  தலைவர்களை, ஆத்தூர் நகர காவல் ஆய் வாளர் ஒருமையில் பேசியுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, சாலையில் தரதரவனை இழுத்துச்சென்ற காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தைவேல், ஜி.கவிதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.