சேலம், மார்ச் 29- மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி, சங்ககிரி ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் தாலுகா, ஏற்காடு, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதி களில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதில், எடப்பாடி பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், சங்ககிரி பகுதியில் அனை வருக்கும் மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஓமலூர் தாலுகா தும்பி பாடி, காடையாம்பட்டி பகுதியில் வண்டிப்பாதை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை பட்டியலிட்டு ஆட்சி யரிடம் மனு அளித்தனர். இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், ஏற்காடு ஒன்றிய செயலாளர் நேரு உள்ளிட்ட எடப்பாடி, சங்க கிரி, ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் தாலுகா, ஏற்காடு, பனமரத்துப்பட்டி பகுதி களை சேர்ந்த இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.