கோவை, ஜன.24 - கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை அந்நிய சூயஸ் நிறுவனத்திடம் வழங்கியதை ரத்து செய்யக்கோரி யும், அதிகாரிகளின் நிர்வாக திறனற்ற நடவடிக்கையால் திணறும் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், எஸ்.எஸ்.குளம் மேற்கு பகுதி செய லாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், சூயஸ் ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் விநி யோகத்தை முறைப்படுத்த வேண்டும். அநியாய சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளை குறைக்க வேண்டும். தலைவிரித் தாடும் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. மனோரகன், யு.கே.சிவஞானம், கே.அஜய்குமார், கே.எஸ்.கனக ராஜ், ஆர்.கோபால் மற்றும் கோவை மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு, சுமதி மற்றும் கோவை கிழக்கு, மேற்கு, சிங்கை, பீளமேடு, வடக்கு, எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட மாநக ராட்சி பகுதிகளில் இருந்து திரளா னோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.