districts

img

தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிடுக

அவிநாசி, ஆக.31- தூய்மைப் பணியாளர்களை, வயது  வரம்பை காட்டி பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம், தலைவர் குமார் தலைமை யிலும், ஆணையர் ஆண்டவர் முன்னிலையி லும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன் சிலர் சுப்பிரமணியம் பேசுகையில், நகராட்சி நிர் வாகம் நல்லாற்றை தூய்மைப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டும். பெயர் மாற்றம், வரி செலுத்துவது போன்ற நிகழ்வுகளுக்கு அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அலைந்து கொண்டிருந்தனர். தற்பொழுது அதிகாரிகள் நியமித்த பிறகும் இதே நிலை நீடிக்கிறது. பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான கொசு மருந்து, ப்ளீச்சிங் பவுடர் போன்றவை காலாவதியாகி, நகராட்சி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கேள்வி எழுப் பினால், ஆட்கள் பற்றாக்குறை என்று கூறுகி றீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். தூய் மைப் பணியாளர்கள் வயதை முன்வைத்து வேலையில் இருந்து நீக்கம் செய்வதாக அறி விப்பு வெளிவந்துள்ளது.

அதேபோல கொசு  ஒழிப்பு பணியாளர்களை, பணிநீக்கம் செய்ய  முடிவெடுத்துள்ளனர். இந்த முயற்சியினை கைவிட வேண்டும். இதே நிலை தொடருமா னால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடு படுவார்கள். நகராட்சி நிர்வாகம் சுமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், என் றார். இதனைத்தொடர்ந்து சிபிஎம் கவுன்சிலர் தேவராஜன் பேசுகையில், சாலை வசதிக ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  கூறியுள்ளீர்கள். ஆனால், ஒவ்வொரு வார்டுக் கும் எத்தனை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான அறிக்கை வேண்டும். திருமுரு கன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அனை வருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும். திருமுருகநாதர் சுவாமி கோவில் செயல் அலுவலர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் களை உடைத்துள்ளார். இவர் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார். இதையடுத்து பார்வதி சிவகுமார் பேசு கையில், தேர் நிறுத்தம் பகுதியில் குப்பை  கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஜீவா காலனி பகுதியில் சாக்கடை கால்வாய்  குழாய் பதித்த பின்பு சாலை அமைக்க வேண் டும். சன்னதி வீதியில் தண்ணீர் குழாயில் சாக் கடை நீர் கலந்து வருகிறது. உடனடியாக நக ராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, சீரமைத்து தர வேண்டும், என்றார்.