சேலம் ஜூலை 12- ஆத்தூர் அருகே தனியார் கோழிப்பண்ணையால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ள நிலையில், நடவ டிக்கை எடுக்காத சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்டித்து அப்ப குதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஈக்களை விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ராமமூர்த்தி நகர் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நிலவும் சுகாதார சீர்கேட்டால், அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஈக்கள் தொல்லை அதி கரித்த வண்ணம் உள்ளது. இதுசம்பந் தமாக சுகாதாரத்துறை அதிகாரி களை அப்பகுதி பொதுமக்கள் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராம மூர்த்தி நகர் பகுதியில் வெள்ளியன்று அப்பகுதி பொதுமக்கள் ஈக்களை விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தொடர்ந்து, அங்கிருந்து சென்று மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுகா தாரத்துறை அதிகாரிகள், ஒரு வாரத் தில் இப்பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். அதன்பேரில் பொதுமக் கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலு காச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன், கிளை நிர்வாகிகள் கந்தசாமி, வெங்கடாச லம், பிரபு, பெரியண்ணன், மாரி முத்து, தங்கம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.