districts

img

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிபிஎம் தேர்தல் பரப்புரை

நாமக்கல், ஏப்.8- ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதர வாக, கடும் வெயிலையும் பொருட்படுத்த்தா மல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர் தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி சார்பில் ஈரோடு நாடா ளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பிர காஷ் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுகிறார். ஏற்கனவே இதற்கு முன்னதாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உதயசூ ரியன் சின்னத்தில் போட்டியிட்டு, மதிமுக வைச் சேர்ந்த கணேசமூர்த்தி (இறந்துவிட் டார்) பெருவாரியான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை திமுக  வேட்பாளர் அமோக வெற்றி பெறும் வகை யில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சியினர், தனித்தனியே திமுக வேட்பா ளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளி பாளையம் ஒன்றியக்குழு சார்பில், தேர்தல் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 8 மணி வரை நடைபெற்ற இந்த பிரச்சார பயணம் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளான பாப் பம்பாளையம், அன்னை சத்யா நகர், ஆலாம் பாளையம், கொக்கராயன் பேட்டை, சில் லாங்காடு, பள்ளிபாளையம் பிரதான சாலை கள், ஆவரங்காடு, காவேரி ஆர் எஸ், புதுப்பா ளையம் என நகரின் 30க்கும் மேற்பட்ட இடங் களில் இருசக்கர வாகனங்களில் செங்கொ டிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆங் காங்கே பொதுமக்களை சந்தித்து துண்டு  பிரசுரங்களை வழங்கி, தேர்தல் பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகள் மோடி அரசின் ஆட்சி யில், மக்கள் விரோத போக்குகளை சுட்டிக் காட்டியும், விலைவாசி உயர்வு, தொழில்  முடக்கம், மோடி அரசின் மதவாத போக்கை  மக்களிடையே எடுத்துக்கூறியும், மோடி ஆட் சியை வீழ்த்த வேண்டிய காரணத்தையும் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வரு கின்றர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.மோகன்,  இ.கோவிந்த ராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கே.குமார், எஸ்.முத்துக்குமார், வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் நவீன் உட்பட பலர் கலந்து  கொண்டனர். கொளுத்தும் கடும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் தேர்தல் பரப்பு ரையை மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற் கொண்டு வருகின்றனர்.