திருப்பூர், மே 22 -
திருப்பூர் வடக்கு ஒன்றிய திற்குட்பட்ட பகுதிகளில் அடிப் படை வசதிகளைச் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா இயக்கம் நடைபெற்றது. சாலை, சாக்கடை, தெரு விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழுவின் சார்பில் பல்வேறு இடங்களில் தர்ணா இயக்கம் நடைபெற் றது.
இவ்இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச. நந்தகோபால், டி.ஜெயபால், தமுஎகச மாநில செயற்குழு ஆர்.ஈஸ்வரன், வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வி.என். முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, ஏ.சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர். இப்போராட்டத்தில், பொதுமக் கள் திரளானோர் பங்கேற்றனர்.