districts

சேலம்: மாணவர்களை ஆணியில் தொங்கவிட்ட அவலம்

சேலம், ஆக.28- ஆசிரியர்களின் அலட்சியத்ததால் 6 ஆம் வகுப்பு பழங்குடியின மாணவர்களை உயர் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறை சுவற்றில் ஆணியில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப் பட்ட மாணவர்கள் சேலம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன் றியம், கம்மாளப்பட்டி பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி யில் ஆறாம் வகுப்பில் படிக்கும் பழங்குடியி னத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் உணவு இடைவேளை முடிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பள்ளி யில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் தக ராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் தக ராறு முற்றிப்போகவே, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பு அறையின் சுவற்றில் இருந்த ஆணியில் ஒருவரையும், கதவில் ஒருவரையும் சட்டையை தூக்கி மாட்டி உள்ள னர். இதில், ஒரு மாணவனின் கழுத்து இறுக் கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரிந்த வுடன் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோருக்கு தக வல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர் ஒருவரின் உடல் மோசமானதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.  சிபிஎம், மாணவர் சங்கம் கண்டனம் இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட் டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி என்பது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிக ளுக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பாக  இருக்க முடியும்.

இச்சம்பவம் குறித்து இது வரை அப்பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோ ருக்கு தகவல் தெரிவிக்காதது கண்டனத்திற் குரியது. தமிழகத்தில் தற்போது பள்ளி வன் முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பள்ளி  மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கவன முடன் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரி யர்களின் அஜாக்கிரதையால் இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க ஆசிரியர்கள் கவன முடன் மாணவர்களை கண்காணிக்க வேண் டும். பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்காம லும் முதல் உதவி சிகிச்சை கூட செய்ய  தவறிய கம்மாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது. முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர்  சுரேஷ், இந்திய மாணவர் சங்க மாவட்டத்  தலைவர் அருண்குமார், மாவட்டக்குழு உறுப் பினர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித் தனர்.