districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு இடையூறு காவல் நிலையத்தில் சிபிஎம் புகார்

நாமக்கல், நவ.18- பள்ளிக்குச்செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து இடை யூறு ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சி யினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிருஷ்ண வேணி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகி றது. இப்பள்ளியில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 2000- மாணவிகள் அப்பள்ளி யில் கல்வி பயின்று வருகின்றனர்.  பள்ளிபாளையம் அருகாமையில் உள்ள மாணவிகள் பேருந்தின் மூலம் பள்ளிபாளையம் நான்கு ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி பள்ளிக்கு வருவ தும், பின் பள்ளி முடிந்து பஸ் நிலையத்தில் இருந்து வீட் டுக்கு செல்வதும் வழக்கம். இந்நிலையில் பள்ளி மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டு நின்று இருக்கும் பொழுது, சமூக விரோதிகள் சிலர், மாணவிகளை கிண்டல் செய்வதும்,  ஆபாசமாக பேசுவது, செல்போன் மூலம் மாணவிகளை படம் பிடிப்பது, பேருந்தினுள் ஏறி மாணவிகளை இடிப்பது, இரு சக்கர வாகனத்தில் மாணவிகள் மீது மோதுவது போல் செல்வ தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி  மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கே அச்சப்பட்டு வருகின்ற னர்.  இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிபாளையம் காவல்  நிலையத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் ஒன் றியச் செயலாளர் லட்சுமணன், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கோவிந்தராஜ், ரவி உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.

மயானம் கேட்ட மக்கள் ஏமாற்றம்

மயானம் கேட்ட மக்கள் ஏமாற்றம் ஈரோடு, நவ.18- மயானம் கேட்டு சடலத்துடன் மறியலில் ஈடுப்பட்டவர்களி டம் அளித்த வாக்குறுதிபடி அளவீடு செய்வதில் அதிகாரிகள்  திட்டமிட்டு தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.  ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்திற்குட்பட்ட ஒரிச் சேரிபுதூர், காமராஜ் நகர் பட்டியலின மக்களுக்கு அரசு முறை யாக மயானம் ஒதுக்கீடு செய்து தரவில்லை என்று அப் பகுதியினர் கடந்த சனியன்று சடலத்துடன் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வருவாய்  மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, திங்க ளன்று நிலத்தை அளவீடு செய்து ஒதுக்கீடு செய்து தருவ தாக உறுதியளித்தனர். இதனையேற்று அப்பகுதியினர் போராட்டத்தை கைவிட்டனர். அரசு அலுவலர்கள் உறுதியளித்தபடி முறையாக நில  அளவீடு செய்யவில்லை. கரும்புக் காடு உள்ளிட்ட கார ணங்களைக் கூறி அளவீட்டு பணியை ஒத்தி வைத்து சென்ற னர். செவ்வாயன்று செயற்கைக் கோள் உதவியுடன் நவீன  தொழில்நுட்பத்தில் அளவீடு செய்யப்படும் என கூறப்படு கிறது. ஆனால், போராட்டத்தின் போது அளித்த உறுதி மொழியை நிறைவேற்ற அரசு அலுவலர்கள் காலங்கடத்து வது ஏமாற்றமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பாலிஹாலைட் உரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

பாலிஹாலைட் உரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல் உதகை, நவ.18- நீலகிரி விவசாயிகள் பொட்டாஸ் உரத்திற்கு மாற்றாக  பாலிஹாலைட் உரத்தை பயன்படுத்த உதகையில் நடை பெற்ற வேளாண் கருத்தரங்கத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் சார்பில் வேளாண் கருத் தரங்கம் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள என்சிஎம் எஸ் மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில், மாநில  மேலாளர் பார்வதி ராஜா வரவேற்றார். மத்திய உருளை கிழங்கு ஆராய்ச்சி மைய தலைவரும் பேராசிரியருமான பிரியங் ஹனுமன் மகத்ரே, உருளைசாகுபடி மேம்பாடு  குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்  லாவண்யா ஜெயசுதா, விவசாயிகள் மண் பரிசோதனை யின் அடிப்படையில் மட்டுமே உரமிட வேண்டும். கலப்புரங்க ளுக்கு மாற்றாக நேரடி உரங்களையும் டிஏபி., உரத்திற்கு மாற் றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பிளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும், என்றார்.  மேலும், விவசாயிகள் பொட் டாஸ் உரத்திற்கு மாற்றாக பாலிஹாலைட் உரத்தை பயன்ப டுத்த வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது. இதில் திரா ளன விவசாயிகள் பங்கேற்றனர்.

57 ஆவது தேசிய நூலக வார விழா

57 ஆவது தேசிய நூலக வார விழா தருமபுரி, நவ.18- 57 ஆவது தேசிய நூலக வார விழா ஞாயிறன்று தருமபுரி யில் கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம்  இணைந்து நடத்தும், 57 ஆவது தேசிய நூலக வாரவிழா,  தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட நூலக அலுவலர் அர.கோகில வாணி தலைமை வகித்தார். முதல் நிலை நூலகர் ரா.மாதேஸ் வரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். இதையடுத்து நக ராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வாசகர்  வட்ட துணைத்தலைவர் மு.பொன்முடி, தலைமை ஆசிரியர் கள் மா.பழனி, க.சி.தமிழ்தாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். முடிவில், மூன்றாம் நிலை நூலகர் கி.அமுதா நன்றி கூறி னார்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் 

திருப்பூர், நவ.18- திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுமுறை நாட்கள்  முடிந்து திங்களன்று வழக்கம்போல பள்ளி காலை துவங்கி யது. பள்ளித் துவங்கிய சிறிது நேரத்தில், பள்ளியில் வெடி குண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும்  என இமெயில் மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக பள்ளி  நிர்வாகத்தினர் நல்லூர் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பள்ளி யில் இருந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட் டோரை பாதுகாப்பாக பள்ளி மைதானத்தில் அமர வைத்த னர். இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத் திற்கு வரவழைக்கப்பட்டு  பள்ளி வகுப்பறைகள், அலுவ லகங்கள், கழிவறைகள்  மற்றும் பள்ளி மாணவர்களின் புத்த கப் பைகள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு  மிரட்டல் விடுத்த சம்பவம் அறிந்து பெற்றோர்கள் பள்ளி முன்பு  திரண்டனர். எனவே பள்ளிக்கு இரு தினங்கள் விடுமுறை  அளிக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு மிரட்டல் விடுத்த சம்ப வம் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

நில உரிமை மாற்ற கோரிக்கை

திருப்பூர், நவ.18- திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்க ளன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட 52 ஆவது வார்டு முத்தையன் நகர்  பகுதி மக்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது,   முத்தையன் நகர் பகுதியில்  நகர்புற வளர்ச்சி திட்டத் தின் கீழ் பட்டா வழங்கப்பட் டவர்களுக்கு நில உரிமை  மாற்றம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. ஆனால், மொத்தம் 201  பேரில் இன்னும் மனை எண்.1 முதல் 129 வரை உள்ள  பயனாளிகளுக்கு கிரயப்பத் திரம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு கிரயப்பத்தி ரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டு கொண்டுள்ளனர்.