districts

img

சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளராக சி. பத்மநாபன் தேர்வு

கோயம்புத்தூர், டிச. 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக சி.பத்ம நாபன் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்கள், வரத ராஜபுரம் சாய்விவாஹா மஹாலில் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வி.ஆர். பழனிச்சாமி சுதா ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது.

மாநாட்டில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பி னர் என். குணசேகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

புதிய மாவட்டக்குழு தேர்வு

மாநாட்டில் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக சி.  பத்மநாபன் தேர்வு செய்யப் பட்டார். அ. ராதிகா, எஸ்.  கிருஷ்ணமூர்த்தி, கே. மனோ கரன், கே. அஜய்குமார், கே. எஸ். கனகராஜ், வி. தெய்வேந் திரன், என்.ஆர். முருகேசன், ஆர். கோபால், வி.ஆர். பழ னிச்சாமி, வி. சுரேஷ், என். ஆறுச்சாமி, வி. இராம மூர்த்தி ஆகியோர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்

கோவையில் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு நியாயமான ஊதியமும், சட்டப் பாது காப்பும், இஎஸ்ஐ மற்றும் பி.எப். உள்ளிட்ட சலு கைகளும் கிடைப்பதில்லை; எனவே தமிழக அரசு, மேற்கண்ட ஊழியர்களுக்கு நியாயமான ஊதியமும் சலுகைகளும் கிடைக்க நட வடிக்கை தலையீடு செய்ய வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோரை பாதிக்கும் ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய மக்க ளுக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபடி இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைதியான சூழலில் உள்ள கோவையில் திட்ட மிட்டு வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கில் பாஜக உள்ளிட்ட இந்துத் துவ அமைப்புகள் செயல் படுவதை தடுத்து நிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்க ளை திரட்டி தொடர் இயக்கங் களை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.