districts

img

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி சிபிஎம் முற்றுகை

திருப்பூர், ஆக.1- தோண்டிப்போட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 10, 14 ஆவது வார்டுகளில் தோண்டிப்போட்ட சாலை களை உடனடியாகச் சீரமைத்து, தர மான தார்ச்சலைகளாக அமைத்துத் தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  செவ்வாயன்று முதலாம் மண் டல அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இப்போராட்டத்திற்கு கட்சியின் நகரக் குழு உறுப்பினர் அ.ஆறுமுகம் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்த கோபால், நகரக்குழு உறுப்பினர்கள் பி. நவபாலன், பி.சின்னச்சாமி, பி.ரகுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். இந்தப் போராட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை, மண்டல உதவி  ஆணையர் முருகேசனிடம் கொடுத்த னர். மனுவை பெற்றுக் கொண்டு, மாரி யம்மன் கோவில் அருகில் அங்கன்வாடி மையத்தின் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், குடிநீர்க் குழாய்ப் பழுதுகளை சீரமைக் கவும், ஒரு சில சாலைகளில் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், மீத முள்ள சாலைகளை விரைவில் அமைத் திடவும் உறுதியளித்தார். சாலைகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் உடைப்பு சரிசெய்தல், குப்பைகள் அகற் றுதல் ஆகிய பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.