நாமக்கல், நவ.23- மயானத்திற்கு பாதை அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி, உப்பு குளம், காட்டுவலவு, காளிகாடு, பாலி பாறை, வாத்தி யார் காடு பகுதியில் இருந்து உப்புக்குளம் மயானம் மற்றும் கோவில் செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லை. இத னால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், போதிய சாலை வசதி இல்லாததால், ஊரில் யாரேனும் இறந்தால், உடலை தனியா ரின் நிலத்தின் வழியாகதான் எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விவசாய நிலங்கள் வழியாக உடலை எடுத்து செல்லும்போது சேற்றுக்குள் இறங்கி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் நிலத்தில் அவ்வப்போது இறந்த உடலை எடுத்துச் செல்லும் போது தேவையற்ற பிரச்ச னைகள் ஏற்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகவே நீடித்து வரும் இந்த பிரச்சனையில் உரிய தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் தனேந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பெருமாள், ஊர் பெரியவர் ராமமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட்ட திரானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மயான பாதை குறித்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.