districts

img

மயானத்தை பெயர் மாற்றம் செய்யக்கோரி சிபிஎம் போராட்டம்

நாமக்கல், ஜன.19- பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் மயானத்தை தரிசு புறம்போக்கு என உள்ளதை வகை மாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி யினர் பரமத்திவேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றி யம், மணியனூர் சிற்றூர் ஆட்சியில் பல தலை முறைகளாக போயர் சமூக மக்கள் இடுகாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த இடுகாட்டு நிலத்தை அரசு ஆவணங்களில் தரிசு புறம்போக்கு என இடம்பெற்றுள்ளது. இதனை வகை மாற்றம் செய்து போயர் சமூக மயானம் என மாற்றி தர வேண்டி இப்பகுதி மக்கள் மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது சம்பந்தமான கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனுவாக அளித்தும எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், இப்பிரச்சனைக்கு நிரந் திர தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில், பர மத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணியனூர் கிளையின் சார்பில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தில், வட்டக் குழு உறுப்பினர் கருப் பையா தலைமை ஏற்றார். காத்திருக்கும் போராட்டத்தையடுத்து வாட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து தீர்வு காண்பதாக உறுதி யளித்ததின் பேரில், காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், சுப்பிர மணி, சண்முகம், சரவணக்குமார், சக்திவேல், வட்டக் குழு உறுப்பினர் பி.குணசேகரன் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.