திருப்பூர், ஜூன் 25- இடிந்து கிடக்கும் சாக்க டைக் கால்வாயைக் கட்டித் தரக்கோரி முதலாம் மண்டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால் செவ்வாயன்று முத லாம் மண்டல அலுவலகத் தில் உதவி செயற்பொறியா ளர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோரி டம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத் திற்கு உட்பட்ட 12 ஆவது வார்டில் அம்மையப் பன் நகர் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட் டோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள முக்கிய சாலையில் கட்டப்பட்டுள்ள சாக்க டைக் கால்வாயின் ஒரு பகுதி இடிந்து புதைகு ழியாக மாறிக்கிடக்கிறது. மழைக் காலங்க ளில், மழைநீர் வெளியேற வழியின்றி, சாலை யில் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகு றித்து பலமுறை நிர்வாகத்திடம் வலியுறுத்தி யும் நடவடிக்கை எடுக்கபடவில்லை. எனவே உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்து, இடிந்துள்ள சாக்கடை கால்வாயை சீர மைத்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட உதவி ஆணை யர் கனகராஜ் அடைத்து கிடக்கும் சாக்க டையை உடனடியாகச் சுத்தம் செய்து கொடுப் பதாகவும், இடிந்துள்ள சாக்கடைக் கால் வாயை சீரமைத்துத் தருவதாகவும் உறுதி யளிதார். இந்நிகழ்வில், நகரக் குழு உறுப்பினர் பி. சின்னச்சாமி, வேலம்பாளையம் ஏ கிளைச் செயலாளர் வி.வெள்ளிங்கிரி உள்ளிட்ட புதுக் காலனி கிளைத் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.