districts

img

சிறு பழக்கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் நகராட்சி தலைவரிடம் சிபிஎம் மனு

தருமபுரி, நவ.16 - தருமபுரி பேருந்து நிலையத்தில் மீண்டும் பழக்கடை வைத்து வியா பாரம் செய்துகொள்ள அனுமதிகேட்டு, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாதுவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டது. மனுவில் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறியளவில் பழக்கடை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சியின் மூலம் சாலையேர சிறு  வியபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் சிறு வருவாயை நம்பி தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு  தினங்களுக்கு முன் பழக்கடைகள் வைக்கக்கூடாது என நகராட்சி நிர்வாகம் கெடுபிடி செய்துவருகின்றனர். இத னால் இந்த சிறு வியாபாரிகள் வரு வாய் இல்லாமல் சிரமப்பட்டு வரு கின்றனர். மேலும் தின வருவாயை இல்லாததால்  வாங்கிய கடனை திருப்பி  செலுத்த முடியாமல் வியாபாரிகள் உள்ளனர். எனவே இச்சிறு வியாபாரி களின் வாழ்வாதாரம் கருதி அவர் களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறுபழக்கடை வைத்துக்கொள்ள மீண்டும் அனுமதி வழங்க வேண்டு மென மனுவில் தெரிவித்திருந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன், நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு மற்றும் நிர்மலா ராணி ஆகி யோர் மனு அளிக்கும்போது உடனி ருந்தனர்.