அவிநாசி, மே.29- உமையஞ்செட்டிபாளையம் பகுதி யில் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப் பட்டும், சாலை அமைக்கப்படாமல் உள் ளது. இந்த பணியை உடனே தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட் டது. அவிநாசி ஒன்றியம், வேலாயு தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பிரிவிலிருந்து உம்மை யஞ்செட்டிபாளையம் வரை சாலையை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்.29 ஆம் தேதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், தற்பொ ழுது வரை பணி நடைபெறாமல் உள் ளது. எனவே உடனடியாக இந்த சாலை பணிகளை துவக்க வேண்டும், மேலும் மழை வெள்ள அரிப்பில் இருந்து சாலையின் வலது புற பாலத்தை பாது காக்க, சாலையை அகலப்படுத்தி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மனோ கரனிடம் மனு அளிக்கப்படுள்ளது. இம்மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர், பத்து நாட்களில் பணி கள் துவங்கும் என தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து ஒரு வார காலத்திற் குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறி யுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜன், முன்னாள் கிளைச் செயலா ளர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.