districts

img

நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர்

சேலம், மார்ச் 1- சேலத்தில் குற்றவியல் நீதிப தியை, நீதிமன்ற ஊழியர் கத்தி யால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் உள்ள குற்ற வியல் நீதித்துறை நடுவர் எண் நான் கில் நீதிபதியாக பணிபுரிந்து வருப வர் பொன் பாண்டியன். இவர் செவ் வாயன்று காலை நீதிமன்ற வளா கத்திற்குள் உள்ள நீதிபதி அறை யில் இருந்த போது, அங்கே வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்ப வர் பணி மாறுதல் குறித்து நீதிபதி யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. அப்போது நீதி மன்ற ஊழியர் பிரகாஷ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் நீதி பதியை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து நீதிபதி கூச்சலிடவே அங்கிருந்த வழக்கறிஞர்கள் நீதி மன்ற ஊழியர் பிரகாஷை பிடித்து அஸ்தம்பட்டி காவல் துறையினரி டம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை யினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து காயம் ஏற் பட்ட நீதிபதி சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவ லறிந்த மாவட்ட நீதிபதி குமரகுரு,  பொன்.பாண்டியனை நேரில் சந் தித்து விவரங்களை கேட்டறிந்தார்.