கோவை, ஜன.13- விஜய் நடித்த ‘வாரிசு’, அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங் கள் வெளியான நிலையில், திரையரங் கங்கள் முன்பு ரசிகர்கள் நடத்திய அளப் பறையால் திரையரங்க மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் ரசிகர்களை கொண்ட விஜய், அஜித் ஆகியோர் படங் கள் அதிகாலை முதல் சிறப்பு காட்சி களாக திரையிடப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி கோவையில் உள்ள தியேட்டர்களில் கடந்த 11-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு படமும், 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு படமும் வெயியிடப்பட்டது. இதில், அஜித் நடித்த துணிவு படம் வெளியிட்ட தியேட்டரில் 1 மணி காட்சிக்கு அதிக அளவில் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் திரையரங்கம் வாயில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த போலீ சார் முயற்சி செய்தபோது போலீசா ருக்கும் ரசிகர்களுக்கும் கடுமையான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் லேசான தடி யடி நடத்தி கலைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் இருந்ததால் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ரசிகர்கள் கண்ணாடி, இரும்பு கைபிடி அனைத் தையும் உடைத்துக் கொண்டு தியேட் டருக்குள் புகுந்தனர். இதில், இருபதுக்கும் மேற்பட்ட வர்கள் காயம் அடைந்தனர். ஒரு சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதயைடுத்து அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கோவை ராம் நகர், 100 அடி ரோடு, ரேஸ்கோர்ஸ், ரயில் நிலையம் ரோடு, உடையம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள தியேட்டர் களில் அதிகாலை காட்சிகள் திரையி டப்பட்டது. அரசு உத்தரவை மீறி பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகை யில் அதிகாலை படத்தை திரையிட்ட திரையரங்க மேலாளர்கள் மீது கோவை ரேஸ்கோர்ஸ், பீளமேடு, காட்டூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, கோவை பூமார்க் கெட்டில் உள்ள தியேட்டர் முன்பு கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்த அஜித் ரசிகர் சந்துரு (25) என்பவர் அனுமதியின்றி பட்டாசு வெடித்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த னர்.