districts

img

சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காமல் விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்த தம்பதி கைது

ஈரோடு, மார்ச் 8- பவானிசாகர் அருகே சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காமல், திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி மாணவியை படு கொலை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரன் - சித்ரா தம்பதியினர் மகளின் காதல்  திருமணத்தை ஏற்கவில்லை. இதனை யடுத்து, திருமணம் செய்து கொண்டவர் களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள னர். இதனால் மஞ்சு - சுபாஷ் தம்பதி யினர் மகளிர் காவல் நிலையத்தில் புகார்  செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த புதனன்று காலை சுபாஷ் அவரது தங்கையை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது நான்கு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மஞ்சுவின் தந்தை சந்திரன், எரங்காட்டூர், நெசவாளர் காலனி அருகே சென்ற போது கொலை வெறி யுடன் சென்று, சுபாஷின் இரு சக்கர  வாகனத்தில் மோதியுள்ளார். இதில்  இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில்,  சுபாஷின் தங்கை ஹாசினி (10ஆம்  வகுப்பு மாணவி) உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பட்டியலினத்தவர்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவு செய்த போலீசார், தலைமறை வான மஞ்சுவின் பெற்றோரை தேடி  வந்தனர். இந்நிலையில், காவல்துறை யினரின் தேடுதலில், நீலகிரி மாவட் டம், உதகை அருகே புதுமந்து பகுதி யில் தம்பதியினர் பிடிபட்டு கைது செய் யப்பட்டனர்.

ததீஒமு நலம் விசாரிப்பு

விபத்தில் படுகாயம் அடைந்து, கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுபாஷை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில  துணைத் தலைவர்  யு.கே.சிவஞானம், மாவட்டச் செயலா ளர் இரா ஆறுச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த னர். மேலும், நீதிக்கான போராட் டத்தில் உறுதுணையாக இருப்போம்  என தெரிவத்தனர்.  மேலும், சுபாஷை  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், ஈரோடு மாவட்ட செய லாளர் அண்ணாதுரை ஆகியோர் தொலைபேசியில் நலம் விசாரித்த னர்.