அவிநாசி, ஜூன் 27 - திருமுருகன்பூண்டி நகராட்சியில் திடக்க ழிவு மேலாண்மை பணியை அயல் பணியாக (அவுட்சோர்சிங்) தனியாருக்கு அளித்து விட்ட நிலையில், சாக்கடை தூய்மைப்பணி செய்வதற்கு 30 பேரை நியமிப்பதற்கான தீர் மானம் நகர்மன்றத்தில் கொண்டு வரப்பப் டது. ஆனால் அதற்கு நகராட்சி ஆணையர் ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து ஆளும் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் உள் பட அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்க ளும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் நகர் மன்றக் கூட்டம் குமார் தலைமையில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் முன்னிலையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கிய உடனே தீர்மானம் வாசிக்காத தால் நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நக ராட்சி பகுதிகளில், சாக்கடை தூய்மைப்ப டுத்த, ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத் தினர். இதற்கு ஆணையர் மறுப்பு தெரிவித் ததால் நகர்மன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மதியத்திலிருந்து மாலை வரை நகர்மன்ற அலுவலகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை முதல் நகர்மன்ற அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து தொடர் போராட்டத்தை மேற் கொண்டனர். இதில் திருமுருகன்பூண்டி காவல்துறை யினர் கட்சிக்கு ஒரு நகர்மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நகர்மன்ற தலைவர் குமார் தலைமையில் நடை பெற்றது. இதில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட மொத்தம் 24 நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக நகர்மன்ற கூட்டத் திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் திருமுருகன்பூண்டி நகரில் தூய்மை பணி மேற்கொள்ள 30 ஆண்கள் நிய மிப்பதற்கு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற லாம் என்று ஆணையர் அனுப்பி இருப்ப தாகத் தெரிகிறது. எனினும் தற்போது நகர்மன்றக் கூட்டத் தில் ஆணையர் ஒப்புக் கொள்ளவில்லை என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி யினர் போராட்டம் நடத்தினர். பல மணி நேரம் நீடித்தப் போராட்டத்தைத் தொடர்ந்து இரவு சுமார் 8 மணியளவில் நகர்மன்றத்தில் 30 பேரை பணி நியமனம் செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட போராட்டம் முடித்துக் கொள் ளப்பட்டது. எனினும் ஏற்கெனவே நகரில் தூய் மைப்பணி மேற்கொள்வதற்கு தற்காலிக தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் இருந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மையை அயல்பணி என தனியார்மயப்படுத்தி விட்டு, தற்போது ஆளும் திமுக உறுப்பினர்கள் 30 பேரை நியமிப்பதற்கு தீர்மானம் கொண்டு வரப் போராடியது, அவர்கள் கொண்டு வந்த தனியார்மயத்தின் விளைவே ஆகும். தூய்மை பணியாளர்கள் தனியார்மயம் ஆக் கப்படுவதை திருமுருகன்பூண்டி நகராட் சியில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானத் திற்கு எதிராக வாக்களித்தது. அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள், வெளிநடப்பு செய்தனர். இத்தீர்மானம் திமுக உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப் பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், குப்பை அள்ளும் பணி மட்டுமே தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் என வரையறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக, சாக்கடை தூய்மை பணி செய்வதற்கு ஆட்கள் இல்லாத பிரச்சனை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களே காத்திருப்புப் போராட்டம் நடத்தியது திரு முருகன் பூண்டியில் பரபரப்பை ஏற்படுத் தியது.