திருப்பூர், நவ.12- புதிய மின்கம்பம் அமைத்து மின் இணைப் புகளை வழங்க மின்வாரியத்தில் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி 31ஆவது வார்டு சிபிஐ மாமன்ற உறுப்பினர் ஆ.ராஜேந்திரன் மனு அளித்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்க ளன்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை யில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், அளிக்கப்பட்ட மனுக்கள் வருமாறு: திருப்பூர் 31ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் அ.ராஜேந்திரன் மனு அளித்தார். இதில், 31ஆவது வார்டு டிஎஸ்ஆர் லேஅவுட் தெருவில் உள்ள ஒரே மின் கம்பத்தில் அதி கமான மின் இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் கம்பமும் சாய்ந்துள்ளது. புதிய கம்பம் அமைத்து பழைய கம்பத்தில் உள்ள இணைப் புகளை அதில் மாற்றி வழங்கக் கோரி மின்வா ரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள் ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச் சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றார். உதவித்தொகை கோரிய மாற்றுத்திறனாளி கண்ணம்மாள் மாசானம் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபு ரம் தாலுகா, தளவாய்பட்டணம் பகுதியில் வசித்து வருகிறேன். நான் கணவரால் கைவி டப்பட்ட மாற்றுத்திறனாளி. எனக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகை கோரி விண்ணப் பித்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. இன்னும் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனக்கு 56 வயது ஆகிறது. எனக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும், என்றார். அவதூறு பரப்பும் சமூக ஆர்வலர் திருப்பூர் 7 ஆவது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் கூறிய தாவது, இந்த வார்டில் தற்போது எனது மனைவி மாமன்ற உறுப்பினராக உள்ளார். எனது சகோதரர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன் பொங்குபாளையம் ஊராட்சியில் விற் பனை செய்த சைட்டில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி சிலர் எனது தாய் வீட்டை ஞாயிறன்று முற்றுகையிட்டனர். எனக்கும், அந்த சைட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் இபி.சரவணன் என்ப வர் சமூக வலைதளங்களில் “7ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அடிப்படை வசதிகள் இல்லாத சைட்டை விற்பனை செய்ததால், மக் கள் அவர் வீட்டை முற்றுகையிட்டனர்,” என பதிவு செய்து வருகிறார். எனக்கும் அந்த சைட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் பொதுமக்களிடம் எனது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக ஈபி.சரவணன் இப்படி அவதூறு பரப்புகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி தாலு காக்குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அவிநாசி தாலுகா, ராமநாதபுரம் ஊராட்சி யில் வண்டிபாதை அரசு புறம்போக்கு நிலத் தில், நான்கு அருந்ததியர் குடும்பங்கள் 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். உடன டியாக அவர்களுக்கு பட்டா வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். சாலையை சீரமைக்க கோரிக்கை திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் பிரதானச் சாலைக்கு உட் பட்ட வீரபாண்டி, அய்யம்பாளையம் நால் ரோடு, பூங்கா நகர், கோவில் வழி ஆகிய பிரதானச் சாலையில் பைப் லைனிற்காக குழி தோண்டி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன் னும் சாலை சரி செய்யப்படவில்லை. தெரு விளக்கும் இல்லாததால், இவ்வழியாக இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இங் குள்ள குழிகளில் விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி சார்பில் அளிக்கட் பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் க.கார்த்திகேயன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.