districts

img

குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

மே.பாளையம், ஏப்.29- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள திருமா நகர் பகுதியில்  50 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந் தன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள  சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், திங்க ளன்று மதியம் திடீரென்று குடிசை வீடுகளில் தீப்பிடித்து எரிய  தொடங்கியது. இதில் 50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில்  ஏரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புதுறை யினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத் திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்ப வம் குறித்து காரமடை  காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட குடிசை வீட்டில் இருந்த  பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அதிக வெயி லின் தாக்கம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா? அல்லது  வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.