districts

img

அரசாணை 152ஐ ரத்து செய்திடுக - மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா

சேலம், நவ.25- சமூகநீதிக்கு வேட்டு வைக்கும்  அரசாணை 152ஐ ரத்து செய்ய  வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங் களின் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடை பெற்றது.  தமிழகத்தில் உள்ள மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய  அமைப்புகளின் பணிகளை தனி யாருக்கு வழங்கிடும் வகையில் தமிழக அரசு அரசாணை 152ஐ நிறை வேற்றி உள்ளது. இதனை திரும் பப்பெற வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி நிர்வா கத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 152 ஐ  திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு  நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். மாநிலச் செயலாளர் ஜம்பு  தலைமையில் நடைபெற்ற இந்த  முற்றுகை போராட்டத்தில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள், அனைத்து பிரிவு அலுவ லர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோதண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் ராணி, சேலம் மாநக ராட்சி பொறியியல் பிரிவு அடிப்படை  பணியாளர் நலச்சங்க செயலாளர் சரவணன், தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு  ஒருங்கினைப்புக்குழு தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  வட்டக்கிளை பொருளாளர் யூனுஸ்  முன்னிலை வகித்தார். சிஐடியு ஊரக  மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில்நுட்ப பணியாளர் சங்க நிர்வாகி ஆர்.பிரேம்குமார் சிறப்புரையாற்றினார். நகர கிளை செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.