திருப்பூர், ஜன.16- வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் பயணிகளுக்கு ரயில் நிலைய வளாகத்திலேயே சுகாதாரத் துறை மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ் நாடு முழுவதும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ரயில் மூல மாக வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில தொழிலா ளர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணி புரி வதற்காக வந்து கொண்டிருக்கின்றனர். திருப்பூரிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் சனிக்கிழமை ஒரே நாளில் 667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வடமாநிலத்தில் இருந்து வரும் தொழி லாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களின் ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் திருப்பூரில் அவர்கள் தங்கியுள்ள முகவரி ஆகியவை சேக ரித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்க ளுக்கு பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்கி இருக் கின்ற இடத்திலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் சுகா தாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.