தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளியன்று விவிடி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கி, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோவை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.