தமிழகம் முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களிலின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருக்கிக்கொண்டுள்ளது. செப் 12 தமிழகத்தில் 5,495 கொரோனா தொற்றுகள் பதிவு செய்யபட்டுள்ளது. ஒரே நாளில் 6,227 பேர் குணமடைந்துள்ளர். மொத்த எண்ணிக்கை 4,41,649 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.97 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 88,562 பேரின் மாதிரிகளில் 5,495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 58,03,778 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று 76 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,307 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 167 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 47,110 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.