சேலம், ஜன.2- பணி நிரந்தரம் செய்யக்கோரி சேலத்தில் இரண்டாம் நாளாக திங்க ளன்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவி லியர்கள் ஜன.1 ஆம் தேதி முதல் பணி யிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திமுக அரசு தேர் தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த காலத்தில் 6 மாத காலம் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப் பட்டது. இதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் களை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதன்பின் திங்களன்று மதியம் ஒப் பந்த செவிலியர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்த னர். இப்போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ந.திருவேரங்கன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ராஜ்குமார் ஆகியோர் உரை யாற்றினர்.