திருப்பூர், மே 30- திருமுருகன் பூண்டி நகராட்சி யில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு தருவதில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருவதால் நகராட் சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகி றது. எனவே இந்த முறைகேட்டைக் களைய மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன் பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கே. வையாபுரி, எம்.அவிநாசியப்பன், கே.காளிமுத்து, எஸ்.காமராஜ் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வெங்கடாசலம் ஆகியோர் திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: திருமுருகன்பூண்டி நகராட்சி யில் வரும் ஜூன் மாதம் முதல் புதிய குடிநீர் இணைப்புக் கொடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆயிரக்க ணக்கான முறைகேடான இணைப் புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் முறைப்படுத்தப் பட்டு வரும் நிலையில், தற்போது புதிய மெயின் பகிர்மானக் குழாய் போடாமல் இணைப்புக் கொடுக் காமலேயே கட்டணத்தொகை ரூ.28 ஆயிரம் கட்டி விட்டதாகக் கூறி, குழாய் இணைப்பு கொடுப்பதற் கான வேலையில் சிலர் ஈடுபட்டுள் ளனர். நிர்வாகத்தின் அனுமதி இல் லாமல் போலி குழாய் இணைப்பு கொடுத்தவர்கள் மீது நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ள னர். எனவே கடந்த காலத்திலும், தற் போதும் தொடர்ந்து முறைகேடாக குழாய் இணைப்பு கொடுத்து குற்றம் இழைத்து நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்படுத்தி வரும் நபர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக நகராட்சிகள், மண்டல நிர்வாக இயக்குநரிடமும் மார்க்சிஸ்ட் கட்சி யினர் நேரில் புகார் மனு அளித்த னர்.