ஈரோடு, செப்.25- ஜனநாயகம் அந்நிய சரக்கு என் கிற கொள்கையுடைய பாஜக ஆட்சி நீடிப்பது மனித குலத்திற்கே ஆபத் தானது என திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் செவ்வாயன்று, ஈரோடு பெரியார் மன்றத்தில், வக்ஃப் திருத்த சட்டம்-2024 எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இவ்வமைப் பின் மாநில உதவித் தலைவர் ப.மாரி முத்து நிகழ்விற்கு தலைமை வகித் தார். மாவட்ட உதவிச் செயலாளர் முகமது நாசர் அலி வரவேற்றார். அரசியலமைப்பின் கொள்கைக ளுக்கு முரணான வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப் பெற நாடா ளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமி ழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநிலக்குழு உறுப்பினர் கே.துரை ராஜ் முன்மொழிந்தார். இதனை மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. இந்நிகழ்வில், கே.சுப்பராயன் எம்பி., மற்றும் கே.இ.பிரகாஷ் எம்பி., ஆகியோர் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர். ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசுகை யில், இஸ்லாமியர்களுக்கு பாது காப்பு அரணாக தமிழ்நாடு முதல மைச்சர் திகழ்ந்து வருகிறார். அனைத்து சாதி, சமய மக்களை யும் ஒரு தாய் மக்களாக ஒருங் கிணைத்து செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். வகுப்புவாதிகள் கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்திருக்கிறோம். எதிர்க்கட்சிகளின் கடுமையாக எதிர்ப்பால் கமிட்டிக்கு அனுப்பி யுள்ளனர். உரிமைகளை பறிக்கும் செயலுக்கு என்றைக்கும் திமுக எதிராக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய சுப்பராயன் எம்பி., இசுலாமியர்களும், இந்துக் களும் இணைந்து முதல் சுதந்திர போரில் ஈடுபட்டனர் என்று வர லாறு கூறுகிறது. இதில் அதிகம் உயி ரிழந்தவர்கள், ரத்தம் சிந்தியவர்கள் முஸ்லிம்கள். இதனை எரிமலை புத் தகத்தில் சாவர்க்கர் எழுதினார். அதே சாவர்க்கர்தான் திசை மாறி வேறு பயணத்தை மேற்கொண் டார். அதற்குக் காரணம் அவரு டைய சொந்த சுயநலன். அவர் அந்த மான் செல்லுலார் சிறையில் இருந்த போது பிரிட்டிஷ் மகாராணியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கூறினார், ஒரு முறை அல்ல ஏழு முறை. நீங் கள் என்னை விடுதலை செய்தால் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட மாட்டேன் என்பதல்ல, நினைக்கவே மாட்டேன். உங்கள் ஆட்சி நீடிக்க நான் உதவுவேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்து தொடங் கிய அமைப்புதான் ஸ்ரீ பாரத தர்ம மண்டல். அந்த அமைப்புதான் ஆர் எஸ் எஸ், இந்து மகா சபாவின் மூலக் கரு. இஸ்லாமியர்களையும், இந் துக்களையும் பிளவுபடுத்தினால் தான் தொடர்ந்து இந்தியாவை ஆள முடியும் என்று அந்த அமைப்பை தொடங்கினார்கள்.
அவர்களின் வாரிசுகள் தான் இந்த மசோதாவை நாடாளுமன்றத் தில் அறிமுகப்படுத்தினார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரா னவர்கள். ஏனென்றால் ஜனநாய கம் இந்திய சரக்கல்ல, அந்நிய சரக்கு என்று கோல்வால்கரால் கற் றுக் கொடுக்கப்பட்டு, அந்த பாடத் தைப் பயின்று வந்தவர்கள் தான் இன்றைய அமைச்சர்கள். அவர்க ளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் ஜனநாயகம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆர்எஸ்எஸ், பாஜகவினர் எதைக் கற்றார்களோ அதை செய்கிறார்கள். நாடாளுமன்ற அமைப்பைப் பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்த ஹிடலர் அதே நாடாளுமன்ற முறை யைத் தகர்த்து விட்டு நானே நிரந் தரத் தலைவன் என்று பிரகடனம் செய்து கொண்டான். அதேபோல் பிரகடனம் செய்து கொள்ளும் முயற்சி கடந்த தேர்தலில் இங்கு நடைபெற்றது. அதைத் தகர்த்தது மக்களின் தீர்ப்பு. மக்களின் தீர்ப்பு மோடி ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்பதுதான். இசுலாமியர்கள் இரண்டு பேர் கோவில் நடத்த லாம் என்று சட்டம் போட முடியுமா! இசுலாமிய சொத்தை நிர்வகிப்ப தற்கு இசுலாமியர்கள் அல்லாத 2 பேர் நியமிக்க வேண்டுமாம். ஆர் எஸ்எஸ் காரர்களை வக்ஃபு கமிட் டிக்குள் நுழைக்க வேண்டும் என் பது தான் அவர்களின் சதித்திட்டம். கலவரங்களைத் தூண்டுவது இவர்கள் குலத்தொழில். அதனை இவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். எனவே தான் கம்யூ னிஸ்ட்டுகள் இவர்களை எதிர்த்து போராடுகிறார்கள்.
கொலை தொழிலை கற்றுக் கொடுத்த கலாசாலையில் கற்றவர் களின் ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பது மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கின்றன ஒன்று. இவர்களின் குரூரங்களை சொன் னால் கல்லும் கரையும். இந்த மசோதாவை சட்டமாக்க முன்மொழிந்தவர்களின் குணக் கேடுகள் வரலாற்றில் இருக்கின் றன. ஒரு சமூகத்தை தனிமைப்ப டுத்தி, அழிக்க நினைக்கிற மாபா விகள் இவர்கள். இவர்களின் கட வுள் எல்லா உயிர்களிலும நான் இருக்கிறேன் என்று தானே சொன் னார். பன்னாடையின் குணம் எடுக்க வேண்டியதை விட்டு விடும். விட்டு விட வேண்டியதை எடுத்துக் கொள்ளும். அந்த குணம் கொண் டதுதான் பாஜகவும், ஆர்எஸ்எஸ் சும். ஜனநாயக அரசியலமைப்பை நிர்வகிக்கிற தார்மீக அருகதையற் றவர்கள். அவர்களுக்கு எதிரான மனப் போக்கு வலுத்து வருகிறது. தீமையும்- நன்மையும், விஷமும்- அமிர்தமும், நல்லதும்- கெட்டதும் ஒரே இடத்திலேதான் இருக்கிறது. இசுலாமிய சகோதரர்கள் தனி மைப்படவில்லை. லட்சக்கணக் கான இந்துக்கள் உங்களுக்காக நிற்பார்கள். அதுதான் தேர்தல் தீர்ப் பில் உறைந்திருக்கிற, மறைந்திருக் கிற உண்மை. இவர்களின் அரசியல் போதை இன்னும் நீடிக்கிறது. அது முடிவிற்கு வர வேண்டும். முடி விற்கு வருவதற்கான முன்னடை யாள மின்னல்கள் தொடங்கி விட் டன. எனவே, நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றார். இதில், மாநில உதவிச் செயலா ளர் கே.எஸ்.இஸாரத்தலி, மாவட்ட உதவித் தலைவர் அருட்பணி டி. விஜயகுமார் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஹாத் திம்தாய் நன்றி கூறினார்.