மக்களவை தேர்தலையொட்டி, சேலம் கூடுதல் சுற்றுலா மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் தொகுதி பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், காவல் ஆணையர் பி.விஜயகுமாரி, துணை ஆணையர் பிருந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.