districts

img

தபெதிக தலைவரின் துணைவியார் படத்திறப்பு

கோவை, பிப்.5- தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணனின் துணை வியார் இரா.வசந்தி அவர்களின் படத்திறப்பு நிகழ்வு கோவையில் நடைபெற்றது. கடந்த ஜன.21 ஆம் தேதியன்று தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிண னின் துணைவியார் இரா.வசந்தி உயிரி ழந்தார். இந்நிலையில், ஞாயிறன்று மறைந்த  வசந்தியின் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்வு கோவை சுங்கம் பகுதியில் உள்ள விக்னேசு மஹாலில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.ராசா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞா னம், கோவை மாநகர துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன் உட்பட பல்வேறு இயக் கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது கு.இராமகிட்டி ணன், திராவிட இயக்கத்தில் தான் பணியாற் றிய காலங்கள், சிறை வாழ்க்கை காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்த இரா.வசந்தி அவர்களின் நெகிழ்வான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். இதன்பின் தலைவர் கள் இரங்கல் உரையாற்றுகையில், கோவை யில் அனைத்து முற்போக்கு இயக்கங்களி லும் முன்நின்று செயலாற்றுகையில், அவ ருக்கு எல்லா கால சூழலிலும் உறுதுனையாக இருந்த அவருடைய துனைவியார் மறைவு மிகுந்த பேரிழப்பு என தெரிவித்தனர். இறுதி யில் இரா.அமுதினி வசந்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.