districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை, ஜூன் 6- கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் பொருத்தப் பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை போக்கு வரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள்  பொருத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ஹாரன்களால் அச்சு றுத்தும் வகையில் ஒலி எழுப்புவதுமாக புகார்கள் எழுந்தன.   இந்நிலையில், கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின் பேரில், மாநகர  போக்குவரத்து போலீசார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தினர்.  அதன்படி, காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து ஆய் வாளர் தலைமையில், போலீசார் திங்களன்று ஆய்வு மேற் கொண்டனர். 30க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 15 பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஏர் ஹாரன்களை அகற்றி பறிமுதல்  செய்யப்பட்டன. மேலும், ஏர் ஹாரன்களை பொருத்தி யிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மறுமுறை இதேபோல் ஏர் ஹாரன்களை பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார்  எச்சரித்து அனுப்பினர்.

ஆதார் திருத்த படிவத்தை கிழித்து எறிந்த வட்டாட்சியர்

நாமக்கல், ஜூன் 6- கொல்லிமலையில் ஆதார் அட்டை திருத்த படிவத்தை கிழித்து எறிந்த வட் டாட்சியர் மீது துறைரீதியான நடவ டிக்கை எடுக்க  விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை, அரியூர் நாடு பகுதியில் வசிப் பவர் ராஜகோபால் விவசாயி. இவரு டைய மனைவி குமாரி என்பவரின் பெயர் ஆதார் அட்டையில் தவறாக  உள்ளது. அதனை திருத்தி பெயர்  மாற்றம் செய்வதற்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள  கணினி மையத்தை அணுகி உள்ளார்.  ஆதார் திருத்துவதற்கான படிவத்தில்,  அரியூர் நாடு பகுதியில வசிப்பதற் கான அத்தாட்சியை அரியூர்நாடு  தலைவர் நாகலிங்கத்திடம் ஒப்புதல்   கையெழுத்து பெற்றுள்ளார்.  இந்நிலையில், ஆதார் படிவத்தைப் பெற்ற கொல்லிமலை வட்டாட்சியர்  அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை, கணினி அதிகாரி படிவத்தில் கையெழுத்து  

சரியில்லை எனக் கூறி படிவத்தை திருப்பித் தராமல் விவ சாயம் கண்முன்னே கிழித்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால்  விவசாயி ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.   இது குறித்து விவசாயி கூறுகையில்,  ஆதார்  படிவம் சரியில்லை என்றால்  என்னிடம் திருப்பிக் கொடுத்திருக் கலாம் அல்லது திருத்திக் கொண்டு வாருங்கள் என கூறியிருக்கலாம். ஆனால், அதிகாரி தன்னிச்சையாக என்  கண் முன்னே கிழித்துப் வீசியது வேதனை  அளிக்கிறது. இவர் மீது அதிகாரிகள், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நான்கு நாட்களாக விவசாய வேலைகளை விட்டுவிட்டு வருமான இழப்பு ஏற்பட்டு வட்டாட்சியர்  அலுவ லகத்திற்கு அலைகிறேன். இந்நிலை யில் படிவத்தை கிழித்து எறிந்ததால்  தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட் டுள்ளது. இவர் மீது மாவட்ட நிர்வாகம்  கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து அரியூர் நாடு தலைவர்   சி.நாகலிங்கம் கூறுகையில், நான் கையெழுத்திட்ட படிவம் தவறாக உள்ளது என்றால் எனக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம்.  வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  கொண்டு வரும் ஆதார் திருத்த படி வங்கள், மாணவ, மாணவிகள் கொண்டு  வரும் விண்ணப்ப படிவங்களை கிடப்பில் போடுவது வேதனைக்குரிய செயலாக உள்ளது. எனவே தமிழ்நாடு முதல்வரும், மாவட்ட ஆட்சியரும் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென தெரி வித்தார்.

27 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

திருப்பூர், ஜூன் 6-  திருப்பூரில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத்  திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக இந்த மையங் கள் திறந்து வைக்கப்பட்டன. தென்னம்பாளையம் பகுதியில்  நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி  துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,  சட்டமன்ற உறுப்பினர்  செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து  பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

கோல்டன்நகர் சாலையை சீரமைக்க மண்டல உதவி ஆணையரிடம் மனு

திருப்பூர், ஜூன் 6 -  திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் பழுதடைந்த தார்  சாலையை சீரமைக்கக் கோரி கடந்த ஞாயிறன்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகரம் கோல்டன் நகர் கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் இப்பகுதி பொதுமக்களிடம் 300மேற்பட்ட கையெ ழுத்துகள் பெறப்பட்டன. செவ்வாயன்று திருப்பூர் நஞ்சப்பா  நகரில் உள்ள இரண்டாவது மண்டல அலுவலகத்தில் உதவி  ஆணையரிடம் மக்களிடம் கையெழுத்துப் பெற்ற கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் விவேக்,  கமிட்டி உறுப்பினர்கள் பிரவீன் குமார், சுபாஷ், சீனிவாசன்  மற்றும் கோல்டன் நகர் கிளை செயலாளர் பிரனேஷ் சோம்நாத்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளம்பிள்ளையில் அடிக்கடி மின்தடை

இளம்பிள்ளை, ஜூன் 6- இடங்கணசாலை, இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தத்தால், அப்பகுதி விசைத்தறி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, இடங்கணசாலை, சித்தர் கோயில், கே.கே.நகர், காடையாம்பட்டி, மேட்டுக்காடு, கொசவபட்டி, பரமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதிகளில் அண்மை காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மரங்கள் விழுந்து, மின்கம்பங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பகல்  மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.  மேற்கண்ட கிராமங்களில் தறி தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் கடன் பெற்றுள்ளனர். மின்தடை ஏற்படுவ தால் தொழிலை சரியாக நடத்த முடியாமல், கடனை கட்ட  தவித்து வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறப்பதால், பிள்ளைகளின் கட்டணங்கள் கட்டுவதில் தடுமாற்றம் ஏற் பட்டுள்ளது. எனவே, தடையில்லாமல் மின்சாரம் வழங்க மின்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டி கிடக்கும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

கோவை, ஜூன் 6- பூட்டி கிடக்கும் பூசாரிபட்டி கிராம சேவை மையத்தை, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பூசாரிபட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.17 லட்சம் செலவில் 2015-2016 ஆம் ஆண்டு கிராம சேவை மையம் கட்டப்பட்டது. இங்கு பட்டா சிட்டா நகல் எடுத்தல், கணினி சேவை, அனைத்து  சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட வசதிகள் பொதுமக்க ளுக்கு ஏற்படுத்தப்பட்டது. இந்த மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கிராம சேவை மையம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. கட்ட டம் கட்டி 6 ஆண்டுகளை கடந்தும், பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் உள்ளது. அந்த மையத்தை சுற்றி புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் நெகமம் செல்லும் சாலையில் உள்ள கிராம சேவை மையம் பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பூசாரிபட்டி யில் கிராம சேவை மையம் கட்டி பல ஆண்டுகளை கடந் தும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் கட்டடத்தை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மையத்திற்கு செல்ல வழி எங்கே என தேடும் நிலை உள்ளது. எனவே, கட் டடத்தை சுற்றிலும் வளர்ந்து உள்ள புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும், கிராம சேவை மையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மின்னல் தாக்கி பசுமாடு பலி

ஈரோடு, ஜூன் 6- அந்தியூர் அருகே உள்ள  எண்ணமங்கலம், கோவி லூர் செல்லியன்குட்டை பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணியம். விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், செல்லியன்குட்டை பகுதி யில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப் போது சுப்பிரமணியம் வீட் டின் முன்பு கட்டிப்பட்டிருந்த மாடு ஒன்று திடீரென மின் னல் தாக்கி உயிரிழந்தது.

இலவச மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூன் 6- தருமபுரி, சிந்தல்பாடி கிராமத்தில் ஆதி திராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு விவசாய நிலம் இல்லை. கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்ற னர். பல குடும்பங்கள் வீடு இல்லாமல் பழுத டைந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சிறு  வீட்டிலேயே இரண்டு, மூன்று குடும்பங்க ளாக வசித்து வரும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 12 ஏக்கர்  நிலம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட் டது. எனவே, ஆதிதிராவிடர் மக்கள் நலன் கருதி அந்த இடத்தில் வீடு இல்லாமல் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் 250 பேருக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.

15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ஈரோடு, ஜூன் 6- ஈரோடு, அம்மாபேட்டை அருகே பாலமலை வனச்சர கத்தையொட்டி அமைந்துள் ளது குருவரெட்டியூர். இப் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவை யான சோளத்தட்டையை பயிரிட்டுள்ளார். இந்நிலை யில், சோளத்தட்டையை அறு வடை செய்து கொண்டிருந் தார். அப்போது சோளத்தட் டைகளுக்கு இடையே மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென் றதை கண்டதும், அங்கிருந்த வர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தக வல் கிடைத்ததும் சென்னம் பட்டி வனத்துறையினர் சம் பவ இடத்துக்கு விரைந்து  சென்று, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதன் பின் மலைப்பாம்பு பாதுகாப் பாக சென்னம்பட்டி வனப் பகுதியில் விடப்பட்டது.