districts

img

அவசர அறுவை சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு: சிபிஎம் கண்டனம்

திருப்பூர், ஜூன் 14– உடுமலை அரசு மருத்துவமனையில் அவ சர அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படு வோருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ள்ளது. உடுமலை அரசு மருத்துவமனைக்கு செவ்வாயன்று மதியம் ஒரு ஏழைப் பெண் குழந்தை வயிற்று வலியால் துடிதுடித்து அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு இருந்த  மருத்துவப் பணியாளர்கள், குழந்தைக்கு அப்பன்டிக்ஸ் (குடல் வால் வெடிப்பு) என்று  சொல்லி, உடனே அறுவை சிகிச்சை செய்ய  வேண்டும் என்று கூறியுள்ளனர். அறுவை  சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு  ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்துள்ள னர். அப்படியானால் உடனே அறுவை  சிகிச்சை செய்யும்படி பெற்றோர் கூறியுள்ள னர்.

ஆனால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர் வேலை நேரம் முடிந்து கிளம்பிவிட்டார். நாளை காலைதான் வரு வார். அட்மிஷன் போட்டு படுக்கை தருவதாக வும், மறுநாள் மருத்துவர் வந்து அறுவை சிகிச்சை செய்வார், அதுவரை வேறு உத்தர வாதம் சொல்ல முடியாது என்றும் தெரிவித் துள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர், வேறு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச் சைக்கு அழைத்துச் சென்றனர். தலைமை  மருத்துவர் விடுமுறை, அவரைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தர மறுத்துள்ள னர். அறுவை சிகிச்சை நிபுணரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் கூறினார். அவசரத்திற்கு உதவாத உடுமலை அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சை தேவைப்படு கிறது. தலைமை மருத்துவர், அன்றைய தின  பொறுப்பு மருத்துவர் செல்போன் எண்கள்,  மாவட்ட துணை இயக்குனர் செல்போன் உட்பட முக்கியமானவர்கள் செல்போன் எண் களை வெளிப்படையாக தெரியப்படுத்து வதும், அழைத்தால் எடுத்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வதும் அவசியம். செவ் வாயன்று மருத்துவச் சேவையில் அலட்சிய மாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட ஏழைக்  குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கி.கனகராஜ் கூறி யுள்ளார்.