districts

img

திருமுருகன்பூண்டி தேர் செல்லும் பாதையில் காங்கிரீட் சாலை அமைப்பு

திருப்பூர், பிப்.7- திருமுருகன் பூண்டியில் தேர் திருவிழா வின்போது தேர் இழுத்துச் செல்லும் பாதை யில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி துரித மாக நடைபெற்று வருகிறது. இதற்கு நடவ டிக்கை எடுத்த மாநில செய்தி துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதனுக்கு இப்பகுதி மக்கள்  வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளனர். திருப்பூர், திருமுருகன்பூண்டியில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. விரைவில் மாசி தேர் திருவிழா நடக்க உள்ளது. இக்கோவில் முகப்பு பகுதியில்  உள்ள பிரதான சாலையில் 4 ஆவது குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இங்கு குழிகள் தோண்டப்பட்டு,குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த தார் சாலையின் ஒரு பகுதி பழுதடைந்துள்ளது. தேர் திருவிழா நடைபெற உள்ள நிலை யில் இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என, திருமுருகன்பூண்டி நகர மக்கள் கோரிக்கை வைத்தார். இதன் அடிப் படையில் உடனே சாலையை செப்பனிட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ சாமிநாதன் அறிவுறுத்தி னார். இதையடுத்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் சரவணன் மேற்பார்வையில் குழாய் பதித்த பகுதிகளில் ஒரு அடி ஆழத் திற்கு மண் தோண்டி அகற்றப்பட்டு, அதில் கான்கிரிட் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. தற்போது தேர் செல்லும் வழி முழுவதும் கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அதன் மீது தார் சாலை  போடப்பட உள்ளது. தேர் திருவிழாவின் போது அனைத்து சாலைகளும் சரி செய்யப் பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்த னர்.