உடுமலை, செப்.12- எளிய மக்களின் கோரிக்கைகளை கேட்க மறுக்கும் உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மத் திய பேருந்து நிலையம் அருகே நகராட் சிக்கு சொந்தமான கழுத்தருத்தான் பள் ளம் இருந்தது. நகரின் தென்பகுதி மற் றும் மேற்கு பகுதிகளில் இருந்து மழைக் காலங்களில் வரும் தண்ணீர், பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் இந்த பள்ளத்தில் செல்லும் வகையில் இயற் கையாக அமைந்துள்ள பள்ளத்தின், கரைகளில் பழமையான மரங்கள் மற் றும் பூங்கா அமைக்கபட்டிருந்தது. இந் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனிநபர்கள், பள்ளத்தின் கரைப் பகுதியில் இருக்கும் மரம், செடிகளை அகற்றி, வீட்டுமனையாக மாற்றியுள்ள னர். நகராட்சி நிர்வாகத்தின் கட்டுபாட் டில் இருக்கும் இடத்தை ஆக்கிமிரப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி நிர்வாகத்தி டம் மனு அளிக்கப்பட்டது. மேலும், மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. மேலும், புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் யசோதா ராமலிங்கம் லேஅவுட் மற்றும் பல மருத்துவமனைக ளுக்கு செல்லும் வகையில் பல ஆண்டு காலம் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து புதிய பேருந்து நிலையத்தின் சுற்று சுவர்கட்டுவதை நிறுத்த வேண் டும் உள்ளிட்ட எளிய மக்களின் கோரிக் கைகளை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடு மலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத் திற்கு, சிபிஎம் நகரச் செயலாளர் தண்ட பாணி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங் கம் கண்டன உரையாற்றினார். நகரக் குழு உறுப்பினர்கள் தோழன்ராஜா, ஜஹாங்கீர், வசந்தி, சித்ரா மற்றும் கழுத் தருத்தான் பள்ளம் அருகே வசிக்கும் பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.