சேலம், ஜூலை 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் கட்சி “தோழர்களின் குடும் பங்கள் சங்கமம்” நிகழ்வு ஏற்காடு ‘ரெட்ரீட் வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சிபிஎம் சேலம் மாநகர செயலா ளர் என்.பிரவீன்குமார் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறி வியல் இயக்கம், வானவியல் ஆர்வ லர் சேலம் ஜெயமுருகன் பங்கேற்று பல்வேறு பாடல்களை பாடி கொண்டே “சுயஅறிமுகம்” அமர்வை நடத்தினார். தமுஎகச மாநில நிர்வாகி நாகை மனைதுணை நாதன் பங்கேற்று குழந்தைகளுக் கான ஓரிகாமி பயிற்சி மற்றும் பல் வேறு விளையாட்டுகளை அறிமுகப் படுத்தி குழந்தைகளை உற்சாக படுத் தினார். தமுஎகச நெல்லை மாவட்ட செயலாளர் தாமிரபரணி மதியழகன் பங்கேற்று குழந்தைகளை வைத்து “வலி” என்ற நிஜநாடகத்தையும், “காக்கா” மற்றும் “கிறுக்கன்” என இரு நாடகங்களை நிகழ்த்தினார். “கடவுள் உண்டா? இல்லையா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி மன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா பங்கேற்று நடுவராக இருந்து தீர்ப்பை வழங்கினார். ஏற் காடு தில்லைகரசி பங்கேற்று “மந்தி ரமா தந்திரமா” மேஜிக் ஷோ நடத்தி னார். இந்நிகழ்ச்சியில், தவில் கலை ஞர் மேட்டூர் காவேரிதுரை, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி. ராஜேஷ்குமார், வி.வெங்கடேஷ், ஆர்.குருபிரசன்னா, எஸ்.காவேரி, பி. செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமா னோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.