தருமபுரி, பிப்.15- மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மூத்த தலைவர் தோழர் டி.சண்முகம் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும் திறம்பட பணியாற் றியவர் டி.சண்முகம். இதன்பின்பு அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, உழைக் கும் மக்களின் உரிமைக்கான போராட்டத் தில் தன்னை இணைத்துக் கொள்ளும் வகை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியரானார். இதைத்தொடர்ந்து கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உயர்ந்து, உழைப்பாளி மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை உழைத்த டி.சண்முகம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று அனு சரிக்கப்பட்டது. தருமபுரி செங்கொடிபுரத்தில் நடை பெற்ற நிகழ்வில் தோழரது உருவப்படத் திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்ட செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செயலா ளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப் பினர்கள் கே.பூபதி, கே.குப்புசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.